புதுச்சேரி,ஜூன் 29-
புதுச்சேரியில் அறிவித்தப்படி ரேசன்கடை திறப்பு உள்ளிட்ட மக்கள் நல கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் பல மாதங்களாக மூடப்பட்டுள்ள ரேசன் கடைகளை திறந்து அத்தியவாசிய பொருட்களை குறைந்த விலைக்கு வழங்க வேண்டும். சட்ட மன்றத்தில் அறிவித்தப்படி குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1000,பெண்களுக்கு இலவச பேருந்து ஆகிய திட்டங்களை நடை முறைக்கு கொண்டு வர வேண்டும்.
அரசு புறம்போக்கு நிலங்களில் குடி யிருக்கும் ஏழை மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி முழுவதும் போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி காந்திவீதி முத்துமாரி யம்மன்கோவில் சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் மதி வாணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். கட்சியின் மூத்த தலை வர் தா.முருகன், மாநிலச் செயலாளர் ஆர். ராஜாங்கம், உழவர்கரை நகரச் செயலாளர் ராம்ஜி ஆகியோர் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர்.
செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், சீனுவாசன், பிரபுராஜ், கலயமூர்த்தி, சத்தியா மற்றும் சரவணன் உட்பட பலர் பேசினர்.