districts

img

முதியோர் , விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

முதியோர், விதவை மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பித்து பல மாதங்கள் காத்துக் கிடக்கும் அவலத்திற்கு தீர்வு காண வலியுறுத்தியும், பட்டா மாற்றத்துக்கு லஞ்சம் கேட்கும் வட்டாட்சிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வானூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று (செப். 19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் எம்.கே.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் வி.அர்ச்சுனன், வட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பாலமுருகன், ஐ.சேகர், ஏ.அன்சாரி, கே.நடராஜன், ஆர்.விஸ்வநாதன், கே.மாயவன், அசுவத்தாமன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

;