districts

img

கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிதம்பரம், ஆக. 17-

     கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தரவேண்டிய காவிரி நீர் தரத்தை கண்டித்தும் நீரின்றி கருகும் நெற் பயிருக்கு ஏக்கருக்கு 35 ஆயிரம் நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் காட்டுமன்னார்கோயில் பேருந்து நிலையம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

     இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டச் செயலாளர் தேன்மொழி தலைமையில் தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் பிரகாஷ், புகழேந்தி, விமல் கண்ணன், நகர அமைப்பாளர் மணிகண்டன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் ஜாகிர் உசேன், குமராட்சி பாலமுருகன், புஷ்பராஜ், மாதர் சங்கத்தின் தலைவர் ரேவதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் முனுசாமி மற்றும் பலர் பேசினர்.