டாக்டர் அம்பேத்கரை இழிவுபடுத்திய ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து சிபிஎம் ஆர்.கே. நகர் பகுதி குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், அ.விஜயகுமார், ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் வெ.ரவிக்குமார், கவுன்சிலர் பா.விமலா, நிர்வாகிகள் சரவணன், ஜெயன், விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பாபாசாகேப் அம்பேத்கரை இழிவுபடுத்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து சனிக்கிழமையன்று (டிச.21) நங்கநல்லூரில் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆலந்தூர் பகுதிக்குழு உறுப்பினர் ந.வெங்கடேசன் தலைமையில் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அரிகிருஷ்ணன், ஆலந்தூர் பகுதிச் செயலாளர் கே.வி.சிவக்குமார், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் சுரேஷ் ஆண்டனி உள்ளிட்டோர் பேசினர்.
புரட்சியாளர் அம்பேத்கரை அவமரியாதை செய்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய கோரி சனிக்கிழமையன்று (டிச.21) சென்மேரீஸ் பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி தலைமையில் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி எம்.சி., உள்ளிட்டோர் பேசினர்.
சட்டமேதை அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்; வழக்கு பதிய வேண்டும் என வலியுறுத்தி ஞாயிறன்று (டிச.22) கோயம்பேடு அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் ஏ.நடராஜன் தலைமையில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் இரா.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, சி.செங்கல்வராயன், எஸ்.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் பேசினர்.
அண்ணல் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வெறுப்புணர்வு பேச்சைக் கண்டித்தும், பதவி விலக கோரியும் சிபிஎம் உத்திரமேரூர் வட்டக்குழு சார்பில் ஞாயிறன்று (டிச. 22) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக்குழு உறுப்பினர் எல்.முருகேசன் தலைமையில் மாவட்டச் செயலாளர் கே.நேரு, வட்டச் செயலாளர் வி.விநாயகமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.கே.பெருமாள், எஸ்.ரமணி உள்ளிட்ட பலர் பேசினர்.