districts

img

பூங்காவை அழித்து வணிக வளாகம் கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் பிப்.4 அனைத்து கட்சி போராட்டம் அறிவிப்பு

திருவள்ளூர், ஜன.24- திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம்,  பூங்காவை அழித்து வணிக வளாகம் கட்டு வதை தடுத்து நிறுத்த வேண்டும் என அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்ய ப்பட்டது. திருவள்ளூர் நகராட்சியில் சி.வி நாயுடு சாலையில் அமைந்துள்ள ராஜம்மாள் தேவி பூங்கா மிகவும்  பழமையானது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் பூங்காவிற்காக  ஒதுக்கப்பட்டது. இதில் சிறுவர்கள், முதி யோர் என அனைத்து தரப்பினரும் பயன் படுத்தி வந்தனர். இந்த நிலையில் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் திடீரென விதிமுறைகளை மீறி,    வணிக வளாகங்கள் கட்டுவதற்கு கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. பூங்காவை அழித்து வணிக வளாகங்கள் கட்டுவதை நிறுத்த வேண்டும். பொது மக்கள் நலன் கருதி பூங்காவை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடந்த இரண்டு மாத கால மாக தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வரு கிறது. எனினும் நகராட்சி நிர்வாகம் பூங்காவை அழித்து வணிக வளாகம் கட்டு வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாகம் சட்ட விரோதமாக பூங்காவில் கட்டுமானப் பணி களை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. கட்டுமான பணிகளை உடனடியாக நிறுத்தி  பூங்காவை பழைய நிலையிலேயே பரா மரிக்க வேண்டும். சட்டத்திற்கு விரோத மாக செயல்படும் திருவள்ளூர் நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசையும் , மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி அனைத்து கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத் தில் முடிவு எடுத்துள்ளனர். சிபிஎம்,  சிபிஐ, விசிக,மதிமுக  ஆகிய கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் வெள்ளியன்று (ஜன 24), திருவள்ளூரில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்குப் பிறகு திருவள்ளூர் நகராட்சி ஆணையரை  சந்தித்து பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் திருவள்ளூர் நகராட்சி முன்பு பிப்.4 ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு  எடுக்கப்பட்டுள்ளது. இதில் சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மதிமுக மாவட்ட செயலாளர் மு.பாபு, விசிகமாவட்ட செயலாளர் தளபதி சுந்தர், சிபிஐ மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன்,  திருவள்ளூர் நகர் மன்ற முன்னாள் தலைவர் ப.சுந்தரராசன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜேந்திரன், ஆர்.தமிழரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.