districts

img

எலவனாசூர்கோட்டையை புதிய தாலுகாவாக அறிவித்திடுக மேற்கு ஒன்றிய மாநாடு வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி, அக். 20 - எலவனாசூர்கோட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அறிவித்திட உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 11-வதுஒன்றிய மாநாடு எலவனாசூர்கோட்டையில் நடைபெற்றது. கட்சியின் செங்கொடியை கே.அஞ்சலை ஏற்றி வைத்தார், மாநாட்டிற்கு கே.ஜெயமூர்த்தி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் என்.கோவிந்தன் வரவேற்றார். டி.பச்சையப்பன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.மாநாட்டை துவக்கிவைத்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. சுப்ரமணியன் பேசினார். வேலைஅறிக்கையை ஒன்றிய செயலாளர் வி.ரகுராமன் முன்வைத்தார், வரவு,செலவு அறிக்கை ஆர்.செல்வராஜ் சமர்ப்பித்தார், மாநாட்டினை வாழ்த்தி மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம் பேசினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஏழுமலை நிறைவுறையாற்றினார். ஒன்றியக்குழுதேர்வு 13 பேர் கொண்ட உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றிய குழுவிற்கு செயலாளராக வி.ரகுராமன்  தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் உளுந்தூர்பேட்டையில் அரசு கலைக்கல்லூரியும் எலவனாசூர்கோட்டையில் பாலிடெக்னிக் கல்லூரியும் அமைக்கவேண்டும், எ.புத்தூர், எ.கோட்டை பகுதியில் வாழும் இந்து ஆதியன் இன மக்களுக்கு சாதி சான்று வழங்கவேண்டும், எலவனாசூர்கோட்டையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், தீயணைப்பு நிலையம் அமைத்திடவேண்டும், காட்டு எடையார் புகைப்பட்டி கிராமங்களில் அரசுவங்கி ஏற்படுத்தவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் வலியுறுத்தப்பட்டது.