திருவள்ளூர், நவ 11- சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அமைக்க நிலங்களை வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி, டிச 23 ஆம் தேதி திருவள்ளூர் சுங்க சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்முகம் தெரி வித்தார். சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை NH- 205 க்கு நிலம் அளித்த விவ சாயிகளின் வாழ்வாதார பாதுகாப்பு மாநாடு திருத்தணி அருகில் உள்ள கனக்கம்மாசத்திரத்தில் ஞாயிறன்று (நவ 10), நடைபெற்றது. இதில் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வர் பெ.சண்முகம் பேசுகை யில், ஏற்கெனவே தச்சூர் முதல் சித்தூர் வரை தேசிய நெடுஞ்சாலைக்காக நிலம் எடுக்க பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பல்வேறு போராட்டங்க ளுக்கு பிறகு உரிய இழப்பீடு பெற்றுதரப்பட்டது. அதேபோல் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை NH 205 நிலம் அளித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணை யத்துடன் மாவட்ட ஆட்சி யர் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும். அதுவரை சாலை அமைக்கும் பணி களை நிறுத்தி வைக்க வேண்டும். உரிய நட வடிக்கை எடுப்பதாக பட்சத்தில் அனைத்து விவ சாயிகளையும் ஒன்றி ணைத்து வரும் டிசம்பர் 23 ஆம் தேதி திருவள்ளூர் சுங்க சாவடியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்ரீநாத் தலைமை நடை பெற்ற மாநாட்டில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில செயலாளர் தலை வர் பி.துளசி நாராயணன், மாவட்ட செயலாளர் ஜி.சம்பத் ஆகியோர் உரை யாற்றினர். மாவட்ட துணை தலைவர் அப்சல் அகமத், திருத்தணி ஒன்றிய செயலாளர் பாலாஜி, பள்ளிபட்டு ஒன்றிய நிர்வாகிகள் ஜெய சந்தின், குப்பன், நந்த குமார், ஏழுமலை, நேதாஜி ஆகியோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.