districts

img

நாளுக்குநாள் அதிகரித்து வரும் தெரு நாய் தொல்லை

கடலூர், ஆக.23- கடலூர் மாநகராட்சி பகுதி களில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலையில் அச்சத்துடன் செல்லும் நிலை உருவாகியுள்ளது.  கடலூர் மாநகராட்சி பகுதிகளில் 45 வார்டுகள் உள்ள நிலையில் அண்மை  காலமாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. கூட்டம் கூட்டமாக சாலைகளில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் புதிய  நபர்களையும், வாகனங்களில் சொல் வோரையும் நீண்ட தொலை விற்கு குறைத்துக் கொண்டே துரத்தி செல்கிறது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து எலும்பு முறிவு  ஏற்படும் அளவிற்கு விபத்துக்கள் ஏற்படுகின்றன.அதிகமாக பள்ளி  மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படு கின்றனர்.கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள 10 வது வார்டு பகுதியில் சாலையில் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாநகராட்சி நகராட்சியாக இருந்த பொழுது நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டு வந்தது. அப்போது நாய்களின் எண்ணிக்கை அதி கரிக்காமல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது.  தற்போது மாநகராட்சியாக தரம்  உயர்ந்த பிறகு நாய்களுக்கு கருத்தடைகள் செய்யப்படாதால் அதன் எண்ணிக்கை பல மடைந்து மடங்கு உயர்ந்து. சாலைகளில் சுற்றித் திரிகிறது. பல இடங்களில் குழந்தைகளையும் நாய்கள் கடித்து குதறி வைக்கின்றன. காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சைக்கிளில் செல்லும்போது நாய்கள் குறுக்கும், நெடுக்குமாக ஓடுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகம் தெரு நாய்களிடமிருந்து மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். - வ.சிவபாலன்