சென்னை, அக்.29- ஆரோக்கியமான செயல்பாடுகளினால் பக்கவாதம் ஏற்படுவதை தவிர்க்கமுடியும் என்று கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறினார். உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு செவ்வாயன்று (அக்.29) வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அவர், வழக்கமான உடற்பயிற்சி, சீரான உணவு பழக்கம் ஆகியவற்றால் இந்த நோயை தடுக்கமுடியும் என்றார். பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சை பெற்று குணமடைந்தாலும் இயல் பான நிலையை அடையும் வரை மருத்து வர் சொன்னபடி மருந்துகளை உட்கொள்வ தோடு உடற்பயிற்சியையும் தவறாமல் மேற்கொள்ள வேண்டும். அது வாழ்க்கை யில் சவாலான கால கட்டமாக இருக் கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.பக்கவாத அறிகுறி தெரிந்தால் தாமதிக்காமல் மருத்துவமனைக்கு செல்லவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக பக்கவாதத்திற்கு எதிரான தாக்குதல் என்ற விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. சிம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் மூத்த ஆலோசகர் டாக்டர் சுரேஷ்பாபு பேசுகையில், 40 வயதுக்கு மேல் பக்கவாதம் வந்தாலும் அதற்கான பாதிப்பு கள் உடலில் சிறுவயதில் இருந்தே தொடங்கி விடும் என்றார். உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, உடல்பருமன்,கொழுப்பு ஆகியவை பக்கவாதத்திற்கு முக்கிய காரணம் என்றார். விளையாடுவதன் மூலமாக பல நோய் களை தவிர்க்கமுடியும். உடலை ஆரோக்கிய மாக வைத்துக்கொள்ள விளையாட்டு பயன்படுகிறது. சிறுவயதில் விளையாடினா லும் வேலைக்கு சென்ற பின்னர் விளையா டுவதில்லை. இதனால் உடல் ஆரோக்கியம் தடைபடும். எனவே உடற்பயிற்சி மிகவும் அவசியம் என்றும் இதனால் பக்கவாதத்தை தடுக்கமுடியும் என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் சிம்ஸ் மருத்துவமனை யின் துணைத்தலைவர் டாக்டர் ராஜூசிவ சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.