districts

சென்னை முக்கிய செய்திகள்

பாதிரிவேடு ஊராட்சியில் தனிநபர் பட்டா ரத்து : சிபிஎம் வரவேற்பு

திருவள்ளூர், டிச.16- பாதிரிவேடு ஊராட்சிக்கு சொந்தமான அரசு நிலத்தை,  தனி நபர்கள் பட்டா பெற்றதை ரத்து செய்யப்படும் என கும்மி டிப்பூண்டி வட்டாட்சியர் தெரிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பாதிரிவேடு ஊராட்சிக்கு சொந்தமான ராமைய்யா மடம், ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை,  போலி ஆவணங்களை கொண்டு  பட்டா வழங்கியதை ரத்து செய்து,  அந்த நிலத்தை ஊராட்சியில் ஒப்படைக்க வேண்டும் என சிபிஎம் சார்பில்  கடந்த செப்.10 அன்று கும்மிடிப்பூண்டியில் மண்டல துணை வட்டாச்சியரிடம் மனு அளித்துள்ளனர். போலி ஆவணங்கள் மூலம் பெற்ற பட்டாவை ரத்து செய்ய வேண்டும், அரசு நிலத்திற்கு  சட்ட விரோதமாக பட்டா வழங்க துணை போன ஏற்கெனவே இருந்த வட்டாட்சியர், பத்திர பதிவு அதி காரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெற்றுள்ள குணசேகரன் மற்றும் மனோ கரன் ஆகியோர் மீது சட்ட ரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர் இ.ராஜேந்திரன்  கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாச்சியர் பாரதியிடம் மனு வழங்கப்பட்டது. மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தலை வர்களிடம் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து வட்டாட்சியர் விசா ரணை மேற்கொண்டதில்  கிராம கணக்கு “அ” பதிவேட்டில் அரசு புறம்போக்கு கிராம நத்தம் கிணறு என்று பதிவாகியுள்ளது. கணினி பட்டா-வில் நிலமாக பதிவேற்றம் செய்ததற்கான உத்தரவு நகல் ஏதும் கிராம கணக்கில் பதிவு செய்யப்பட்டவில்லை என விசாரணை மற்றும் ஆவணங்கள் படி தெரிகிறது. இதனால் கிராமத்திற்கு சொந்தமான பொது இடம் என தெரிகிறது. கிராம நத்தம் கிணறு என பழைய நிலையில் நிலை நிறுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் கடிதத்தின் மூலம் தெரிவித்துள்ளார். இதனை சிபிஎம் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இந்த நிலையில் டிச.19 அன்று பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ) இது குறித்து விசாரணையும் நடை பெற உள்ளது என சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் இ.ராஜேந்திரன் தெரி வித்துள்ளார்.

கார் சர்வீஸ் சென்டரில் தீ விபத்து

புழல், டிச.16- புழல் அருகே தனியார் கார் சர்வீஸ் சென்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 கார்கள் எரிந்து நாசமாகின.செங்குன்றம் அடுத்த தண்டல்கழனியில் பிரபல தனி யார் நிறுவனத்தின் கார் சர்வீஸ் சென்டர் இயங்கி வரு கிறது. இங்கு ஞாயிறன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  தொடர்ந்து ரசாயன நுரை கலவையை பீய்ச்சியடித்து தீ அருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சிறை கைதிக்கு கஞ்சா சப்ளை  முதன்மை காவலர் பணியிடை நீக்கம்

திருவள்ளுர், டிச.16-  புழல் மத்திய சிறையில் விசாரணை, தண்டனை மற்றும் மகளிர் சிறைகள் உள்ளன. இந்நிலையில், சிறை யில் உள்ள கைதிகளிடம் கஞ்சா, செல்போன் பயன்படுத்து வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் போது, கஞ்சா, செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. புழல் சிறையில் 3000க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் திருப்பூர் அடுத்த மேலாத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்த சுகுமார் என்பவர் கஞ்சா வழக்கில் கைதாகி கடந்த ஆகஸ்ட் முதல், புழல் சிறையில் உள்ளார். இவரிடம் சிறை முதன்மை காவலர் துரையரசன் 50 கிராம் கஞ்சா கொடுத்து மற்றொரு கைதியான சூளைமேடு பகுதியை சேர்ந்த மெர்வின் விஜய் என்பவரிடம் கொடுத்துவிடுமாறு உத்தர விட்டுள்ளார்.  இதனை ரகசியமாக கண்காணித்த மற்றொரு காவலர் கஞ்சாவை பறிமுதல் செய்து, சிறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சிறைத்துறையின் உயர் அதிகாரிகள் துரையரசனை தற்காலிக பணியிட நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளார். சிறை முதன்மைக் காவலரே கஞ்சா எடுத்து வந்து கைதியிடம் கொடுத்துவிட்டு மற்றொரு கைதியிடம் வழங்கக்கூறிய இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூண்டி ஏரியிலிருந்து  உபரி நீர் திறப்பு குறைவு

திருவள்ளூர்,டிச.16- திருவள்ளூரில் அமைந்துள்ள பூண்டி ஏரி சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக திகழ்கின்றது மழை யின் அளவு படிப்படியாக குறைந்ததால் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் குறைந்துள்ளது. பூண்டி ஏரியின் நீர் இருப்பு திங்களன்று காலை 6 மணி நிலவரப்படி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 7320 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது. மேலும்3231 மில்லியன் கன அடி கொள்ளளவும், 35 அடி உயரமும் கொண்ட பூண்டி ஏரியின் நீர் இருப்பு தற்போது 2521 மில்லியன் கன அடியாக நீடித்து வருகின்றது. உபரி நீரின் அளவு மேலும் நீர்மட்டம் 33 அடியாக உள்ளது. பூண்டி ஏரி யிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 8,500 கன அடியாக குறைந்ததாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர், நீர்வரத்தை பொறுத்து இந்த அளவு குறைக்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் மழையால் பாதித்தோருக்கு  சான்று வழங்கும் சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி, டிச.16- பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு சான்று வழங்கும் சிறப்பு முகாமில் 61 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக கனமழை பாதிப்பு காரணமாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதேனும் சான்றுகள் மழையால் பாதிக்கப்பட்டிருந்தால் சிறப்பு முகாம் நடத்தி  பொதுமக்களுக்கு மீண்டும் சான்றுகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.  அதனடிப்படையில். வாணாபுரம் வட்டத்தில் மூங்கில் துறைப்பட்டு கிராமம், அண்ணா நகர் பகுதி, திருக்கோவிலூர் வட்டத்தில் வெள்ளப் பிள்ளையார் கோவில் தெருப் பகுதிகளில் சான்று மற்றும் இதர ஆவணங்கள் வழங்க முதற்கட்ட சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.  இதில் பிறப்பு, சாதி, வருமானம். இருப்பிடம் மற்றும் மதிப்பெண் சான்று, வாக்காளர் ஆதார், அடையாள அட்டை மற்றும் குடும்ப அட்டை, காசோலை, வங்கி கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவு புத்தகம் என மொத்தம் 61 மனுக்கள் பெறப்பட்டது.  இதில் பெரும்பான்மையான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன் நிலுவையில் உள்ள ஓரிரு மனுக்களுக்கும் விரைவில் உரிய சான்றுகள் வழங்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மாட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

காட்டுயானையால் பயிர்கள் சேதம்

கிருஷ்ணகிரி டிச.16 – தேன்கனிக்கோட்டை வட்டம்,  நொகனூர் வனப்பகுதியில்  சுற்றித்திரிந்த 30 க்கும் மேற்பட்ட யானைகள் அங்கிருந்து தளி அருகே மாடக்கல் ஊராட்சி சூள குண்டா கிராமம் வழியாக கடந்து சென்றது. அப்பொழுது விவசாயி சீனிவாசன் நிலத்திலும்,கேரட்டி அப்பையாவின் நிலத்திலும் பயிரிட்டிருந்த கேள்வரகு, துவரை,அவரை, மா, காளிஃபிலவர், பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்டவற்றை தின்றும், மிதித்தும் அழித்தன.  மேலும் கும்மாளபுரம் வனப்பகுதி தம்மாபுரம் நெல் வயல்களும் சேதமானது. இதில் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளியாற்றில்  குளித்துக்கொண்டிருந்த மாணவர் மாயம்

மதுராந்தகம், டிச. 16-  மதுராந்தகம் ஏரியில் இருந்து கிளியாற்றில் வெளியேறும் உபரிநீரில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். மாணவனை தீயணைப்பு போலீசார் தேடி வரும் நிலையில் உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுராந்தகம் ஏரியிலிருந்து சுமார் 5000 கனஅடி உபரிநீர் கிளியாற்றில் வெளியேறி வருகிறது. இந்நிலையில், கிளியாற்றின் அருகில் உள்ள மலைப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் புவனேஷ் (17) என்பவர் நண்பர்களுடன் ஞாயிறன்று பிற்பகலில் இந்த ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது, அவர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக அவர் நீரில் மூழ்கி அடித்து செல்லப்பட்டுள்ளார். நீண்ட நேரமாகியும் புவனேஷ் வெளியில் வராததை கண்டு அவரது நண்பர்கள் கூச்சலிட்டுள்ளனர்.  இதையடுத்து, அவரது உறவினர்கள், நண்பர்கள் உடனடியாக மதுராந்தகம் தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.அதன்பேரில், தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மாணவரை  நீரில் இறங்கி தேடிவருகின்றனர்.