districts

img

மேல கோட்டையூரில் குடிமனைப்பட்டா கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, அக். 26- வண்டலூர் வட்டம், மேல கோட்டையூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் காந்தி நகர் மக்களுக்கு வழங்கப்பட்ட குடிமனை பட்டாவை அடங்கலில் ஏற்ற வலியுறுத்தி சிபிஎம் சார்பில்  வட்டச் செயலாளர் கே.சேஷாத்திரி தலைமையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வெள்ளியன்று (அக்.25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் சர்வே எண் 148 31C க்கு 2000ஆம் ஆண்டில் வழங்கிய பட்டாவை அடங்கலில் ஏற்ற வேண்டும், சர்வே எண் 171 ல் 60 ஆண்டுகளாக குடியிருக்கும் அனைவருக்கும் குடிமனை பட்டா வழங்க வேண்டும், மேலகோட்டையூரில் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சமுதாயக்கூடம் அமைத்திட வேண்டும், நெல்லிக்குப்பம் சாலையிலிருந்து காவலர் குடியிருப்பு செல்லும் சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும், மேலகோட்டையூர் மற்றும் அதை சுற்றியுள்ள ஊராட்சிகளில் நிலவும் குறைந்த மின் அழுத்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும், மேலகோட்டையூர் விளையாட்டு மைதானம் மற்றும் புதிய குளத்தை சீர் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்,மேலகோட்டையூர் ஊராட்சியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும், பழுதடைந்துள்ள அபாயகரமான மின் கம்பங்களை மாற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைகளை விலக்கி கட்சியின் மாவட்ட செயலாளர் பி.எஸ்.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக கட்சியின் நிர்வாகிகள் கிராம பொதுமக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.