districts

img

பீர்க்கன்காரணை சிக்னலை சீரமைக்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சென்னை, மே 10 - பொதுமக்கள் சாலையை கடக்க ஏதுவாக பீர்க்கன்காரணை ஏரிக்கரை சிக்னலை  சீரமைக்க கோரி புதனன்று (மே 10) பீர்க்கன் காரணையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாம்பரம் மாநகராட்சி, 61வது வட்டத் திற்கு உட்பட்டது பீர்க்கன்காரணை. இங்குள்ள மக்கள் ஜிஎஸ்டி சாலையை கடந்து தாம்பரத்திற்கு செல்ல வேண்டும். இந்த சிக்னலில் அவ்வப்போது தடுப்புகள் வைப்பதால் குடியிருப்புவாசிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே, சிக்னலில் தடுப்புகள் அமைப்பதை கைவிட  வேண்டும். பாதசாரிகள் கடக்க ஏதுவாக தடம்  அமைக்க வேண்டும். நெரிசல் நேரங்களில் காவலர்களை நிறுத்த வேண்டும். ரயில் பாதையை கடந்து பள்ளி மாண வர்கள் செல்ல ஏதுவாக நடைமேம்பாலம் அமைக்க வேண்டும். 15 வருடங்களாக செப்பனிடப்படாமல் உள்ள ஏரிக்கரை சாலையை சீரமைக்க வேண்டும். வார்டு முழுவதும் உள்ள பழுதடைந்த மின்கம்பங்களை சீரமைப்பது, மழைநீர் வடிகால்வாய்களை தூர்வாரி, கொசு மருந்து  அடித்து பராமரிக்க வேண்டும். சிறுவர் விளையாட்டு பூங்காவை மேம்படுத்த வேண்டும். இரவு நேரங்களில் காவல்துறை கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தேவநேசன் நகர் கிளைச் செயலாளர் முருகானந்தம் தலைமை  தாங்கினார். தென்சென்னை மாவட்ட செயற் குழு உறுப்பினர் ச.லெனின், தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா, ஆர்.விஜயா (மாதர் சங்கம்), சீனிவாசன் (தமுஎகச),  அணில்குமார் (முறைசாரா) உள்ளிட்டோர் பேசினர். பச்சையப்பன் நன்றி கூறினார்.