districts

img

அதானி காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டத்தை ரத்து செய்க

திருவள்ளூர், அக். 27- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீஞ்சூர் பகுதி 24 வது மாநாடு ஞாயிறன்று (அக் 27), மீஞ்சூரில் அத்திப்பட்டு தோழர் க.விஸ்வநாதன் நினைவரங்கத்தில் நடைபெற்றது. பகுதி குழு உறுப்பினர் என்.ரமேஷ்குமார் தலைமையில் பி.ஜெய்கணேஷ் வரவேற்றார். மாவட்டக் குழு உறுப்பினர் பி.கதிர்வேலு செங்கொடியை ஏற்றி வைத்தார்.பகுதி குழு உறுப்பினர் ஏ.செந்தில்குமார் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன் துவக்கவுரையாற்ற மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் வாழ்த்தி பேசினார். பகுதி செயலாளர் இ.ஜெயவேலு வேலை அறிக்கையை முன்மொழிந்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ஜி.சந்தானம் மாநாட்டை நிறைவுசெய்து பேசினார். பகுதி குழு உறுப்பினர் கே.வெங்கடேசன் நன்றி கூறினார். தீர்மானங்கள் மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும், மீஞ்சூரில் உள்ள அரசு மருத்துவமனையை காலத்திற்கு ஏற்ப நவீன படுத்த வேண்டும்,  மீஞ்சூர்- நந்தியம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தை விரைந்து முடிக்க வேண்டும், அத்திப்பட்டு புதுநகரில் வசிக்கும் மக்கள் ஆண்டு தோறும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால் அம்மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும், போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பகுதிக்குழுதேர்வு 11 பேர் கொண்ட மீஞ்சூர் பகுதி குழுவின் செயலாளராக என்.ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.