சென்னை, டிச. 20- நச்சு வாயு, பெருவெள்ள ஆபத்தி லிருந்து இந்த பகுதி மக்களை பாது காக்க உரிய நடவடிக்கை எடுத்த பிறகு எண்ணூர் அனல் மின் நிலை யம் விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் சிபிஎம் வலி யுறுத்தியுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்க கருத்து கேட்பு கூட்டம் திருவொற்றியூர் எர்ணாவூரில் வெள்ளியன்று (டிச. 20) நடைபெற்றது. இதில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எல்.சுந்தரராஜன் கலந்து கொண்டு அளித்த மனுவில், எண்ணூர் அனல் மின் நிலையம் நிலக்கரியின் மூலம் மின் உற்பத்தி செய்யும் திட்ட மாகும். இந்த நிலக்கரியை எரிப்ப தால் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆச்சைடு போன்றவைகளும், பிஎம் 2.5 எனும் கண்ணுக்குத் தெரியாத நுண் துகள்கள் வெளியாகி காற்றில் கலந்து காற்று மாசுபடும் என்றும், அதை சுவாசிக்கும் போது மக்க ளுக்கு நுரையீரல் நோய், இதய நோய், புற்றுநோய் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் காற்றை சுவாசிப்பதால் குறைப்பிரசவம், எடை குறைவான குழந்தைகள் பிறப்பது போன்ற ஆபத்துக்கள் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது. மின் உற்பத்திக்காக நிலக்கரியை எரிக்கும் போது வெளியாகும் உலர் சாம்பல் எங்கு கொட்டப்படும் என்று இதுவரை தெரிவிக்கவில்லை. இத்திட்டம் அமைந்துள்ள இடம் பக்கிங்காம் கால்வாய் கரையில் உள்ளது. இப்பகுதியில் சாம்பல் கொட்டப்பட்டால் பெருமழை காலங்க ளில் பெருநகர சென்னை மாநகரத்தில் பெய்யும் மழைநீர் அனைத்தும் பக்கிங்காம் கால்வாய் வழியாக எண்ணூர் முகத்துவாரத்திற்கு செல்வது தடைபடும். ஏற்கெனவே, வடசென்னை அனல் மின்நிலையம் மற்றும் தேசிய அனல் மின் நிலையம் ஆகிய மின்நிலையங்களின் சாம்பல்கள் சுமார் 1,000 ஏக்கருக்கு மேல் 8 அடி உயரம் வரை அருகாமை யில் உள்ள ஈர் நில பரவலில் கொட்டப்பட்டுள்ளதால் சென்னை நகரம் பெருமழை காலங்களில் வெள்ளத்தில் மிதக்கும் நிலை உரு வாகி வருகிறது. சாம்பலினால் நிலத்தடி நீரும் இப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் இன்று வரை உலர் சாம்பல் அகற்றப்படாமல் உள்ளது.
உற்பத்தியின் போது வெளியாகும் எரிநீர் அப்படியே பக்கிங்காம் கால்வாயில் வெளியேற்றப்படுவதால் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து போகும், மீனவர்களின் வாழ்வாதாரமும் கடுமையான பாதிப்புக்குள்ளாகும். எண்ணூர் அனல் மின் நிலை யத்திற்கு தேவையான நிலக்கரி அருகாமையில் உள்ள துறை முகத்தில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலம் எடுத்து வருவதற்கு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே அமைக்கும் போது மழைநீர் செல்வதை முடக்கி வடசென்னை பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் ஆபத்து உள்ளது.இந்த ஆபத்து களிலிருந்து மக்களையும், பெரு வெள்ளத்திலிருந்து சென்னை நகர மக்களை பாதுகாக்கும் நட வடிக்கையை மேற்கொள்ளாமல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் பெரும் பாதிப்பை உருவாக்கும். எனவே அதற்கான ஏற்பாடுகளுடன் இந்த திட்டத்தை செயல்படுத்த உரிய நிபந்தனைகள் விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் வடசென்னை அனல்மின் நிலையம், வல்லூர் தேசிய அனல் மின் நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் எந்த விதி களையும் நடைமுறை படுத்தாததால் இப்பகுதி மக்கள் சுற்றுச்சூழல் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறார் கள். குறிப்பாக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் வேதனையில் உள்ளனர். எனவே விரிவாக்கத்தின்போது மாசு கட்டுப்பாட்டு வாரிய விதி முறைக்குட்பட்டு, உரிய பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து உற்பத்தியை துவங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வலி யுறுத்தியுள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர், மண்டலக் குழு தலைவர் தி.மு.தனியரசு, மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் உள்ளிட்ட சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், எஸ்.பாக்கியலட்சுமி, பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், சூழலியலாளர்கள் கலந்து கொண்டனர்.