districts

விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை: காத்திருக்கும் நேரம் குறைப்பு

சென்னை, டிச.6- லண்டன், சிங்கப்பூர், இத்தாலி,ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட 44 நாடுகளிலிருந்து சென்னைக்கு வரும் அனைத்து விமான பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை விமான நிலையத்திலேயே நடத்துகின்றனர். இதில் ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்ட் எடுக்கும் பய ணிகள் 6-ல் இருந்து 7 மணி வரையிலும், ரேபிட்  பரிசோதனை செய்துகொள்ளும் பயணி கள் ஒரு மணி நேரம் வரையிலும் காத்திருக் கும் நிலை இருந்தது. இது பயணிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை விமான நிலை யத்தில் பரிசோதனை செய்து கொண்டு  காத்திருக்கும் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் காத்திருக்கும் நேரங்களும் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்ட் எடுக்கும் பயணிகளுக்கு 5-ல் இருந்து 6 மணி நேரத் திற்குள்ளும்,ரேபிட் டெஸ்ட் எடுக்கும் பயணி களுக்கு 30-ல் இருந்து 45 நிமிடங்க ளுக்குள்ளும், மாற்று உள்நாட்டு விமானங்களில் செல்லக்கூடிய டிரான்சிஸ்ட் பயணிகளுக்கு 20 நிமிடங்களில் முடிவுகள் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு குடியுரிமை, சுங்கச்சோதனை பிரிவுகளில் கூடுதல் கவுண்டர்கள் திறக்கப்பட்டு, பயணிகள் தாமதமில்லாமல் மருத்துவ பரிசோதனை பகுதிக்கு வர  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல்  மருத்துவ பரிசோதனை முடிந்து காத்தி ருக்கும் பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதி யில் இருக்கைகள் எண்ணிக்கை 450-ல் இருந்து 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் காபி, ஸ்நாக்ஸ் நியாய மான விலையில் கிடைக்க ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாலூட்டும் தாய்மார்களுக்கு  தனி அறை

அதோடு குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை, வைபை, இலவச டெலிபோன் வசதிகள், பொழு போக்கு சேனல்களுடன் டிவி, விமானங்கள் வருகை, புறப்பாடு டிஸ்பிளே, வெளிநாட்டு பணங்களை மாற்றுவதற்கான எக்ஸ்சேஞ்ச் கவுண்டர்கள் போன்றவைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நாளுக்கு 700ல் இருந்து 800 பயணிகளுக்கு சோதனைகள் நடத்தப்படுகிறது. பயணிகளுக்கு மேலும் கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கவும் நட வடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

;