ராயபுரம், ஜூன் 4-
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50). கண்டெய்னர் லாரி ஓட்டுநர். இவர் சனிக்கிழமை இரவு சென்னை துறைமுகத்தில் லாரியை நிறுத்திவிட்டு அருகில் நின்று கொண்டு இருந்தார்.
அதே பகுதியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணன் என்ப வர் கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்தார். அப்போது செந்தில்குமார் மீது வேக மாக வந்த கண்டெய்னர் லாரி மோதியது. இதில் செந்தில்குமார் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து போனார். இது குறித்து துறைமுக காவல்நிலை யத்திற்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து செந்தில் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.