சென்னை, ஜூலை 15-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் நெப்ராலஜி சங்கத்தின் (சிறுநீரகவியல் மருத்துவர்கள்) 9வது ஆண்டு மாநாட்டினை, தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் மாமல்லபுரத்தில் சனிக்கிழமை (ஜூலை 15) துவக்கிவைத்தார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சிறுநீரகவியல் சங்கம் (NATPU) இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தது. மேலும் ஆராய்ச்சியாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்து அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், இந்தத் துறையில் யோசனைகள் மற்றும் புதுமைகளைப் பற்றி விவாதிக்கவும் இந்த மாநாடு நடைபெற்றது.
மாநாட்டு அமைப்புச் செயலாளர் டாக்டர் ரஞ்சனி முத்து பேசுகையில், “சிறுநீரகம் தொடர்பான நோய்கள் பொது சுகாதாரப் பிரச்சினையாகும், ஏனெனில் இது குறித்த விழிப்புணர்வு மிகக் குறைவு. இந்த மாநாடு வளரும் மற்றும் அனுபவம் வாய்ந்த சிறுநீரக மருத்துவர்கள் இணைந்து பணியாற்றுவதற்கும், துறையில் சமீபத்திய முன்னேற்றங்களைத் தெரிந்துகொள்வதற்கும் ஒரு தளமாக அமையும் என்று தாம் நம்புவதாக கூறினார்