districts

சென்னை முக்கிய செய்திகள்

மெட்ரோ ரயிலில்  பெண்கள் பாதுகாப்பாக பயணம்  செய்வதை உறுதிப்படுத்தும் பொத்தான்

சென்னை,அக்.25- சென்னை மெட்ரோ ரயிலில் 4 அலாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலாரத்தின் பொத்தானை அழுத்தினால் பெண்களுக்கு உடனடி உதவிகள் கிடைக்கும். கண்ட்ரோல் ரூம் மற்றும் டிரை வரின் கட்டுப்பாட்டு அறைக்கு இதன் மூலம்  பேச முடியும்.  மெட்ரோ ரயிலில் பெண் பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகள், அசம்பாவிதம், பாலியல் தொந்தரவு குறித்து இதில் புகார்  செய்யலாம். உடனடியாக சி.சி.டி.வி. கேமரா  மூலம் ஆய்வுசெய்து சம்பந்தப்பட்ட நபர்கள்  உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள். கடந்த 4 மாதத்தில் இதுவரை 12 ஆயிரம்  பெண்கள் இந்த அவசர அலார பொத்தானை  அழுத்தி புகார் செய்து பயன்பெற்றுள்ளனர். இதில் உள்ள “விரைவு பதிலளிப்பு குழுக் கள்’ பெண்களுக்கு ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை உரிய நேரத்தில் தடுத்து பெண்களுக்கு தக்க பாதுகாப்பை வழங்கி வருகின்றன.  இது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், மெட்ரோ ரயிலில் ‘பீக் ஹவர்ஸ்’ மற்றும் இரவு நேரங்களில் பெண்கள் மட்டும் செல்லும் பெட்டிகளில் ஆண் பயணிகள் பயணம் செய்வதை தடுக்க  நடவடிக்கை எடுக்குமாறு இந்த பொத் தானை அழுத்தி பெண் பயணிகள் புகார்  கூறி உள்ளனர். பெண்கள் சிரமத்தை  எதிர்கொண்டால், ரயிலின் கதவுக்கு அருகில் பொருத்தப்பட்டு உள்ள’பயணிகள் பாதுகாப்பு பொத்தானை அழுத்தி இண்டர்காம்’ மூலம் உடனடியாக புகார்  தெரிவிக்கலாம். ஒவ்வொரு மெட்ரோ ரயில் பெட்டியிலும் அவசர தேவைகளுக்காகவும், பாலியல் துன்புறுத்தல், மதுபோதை குறித்தும் புகார் அளிக்க 4 இண்டர்காம் போன் வசதிகள் போன் வசதிகள் நிறுவப் பட்டுள்ளன. மெட்ரோ ரயிலில் பெண் களுக்கு துன்புறுத்தல் ஏற்படுத்தியதாக வடபழனி நிலையம், விமான நிலையம்  ஆகியவற்றில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள தாக அவர் கூறினார்.

ஆளுநர் மாளிகை அருகில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு  கண்டனம்! தமுமுக அறிக்கை

சென்னை,அக்.25- முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசி களை முன்விடுதலை செய்யப் பரிந்துரைத்து தமிழ்நாடு அரசால் கடந்த ஆகஸ்ட் 24 அன்று ஆளுநருக்குக் கோப்பு  அனுப்பப்பட்டது.   இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அக்கோப்பிற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலைக்கான கோப்பிற்கு  விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆளுநர் மாளிகையை  முற்றுகையிடும் போராட்டத்தை வரும் அக்டோபர்  28 அன்று நடைபெறவுள்ளது.   இந்நிலையில் புதனன்று  ஆளுநர் மாளிகை அருகில்  பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாகவும், இந்த சம்பவம்  தொடர்பாக ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டிருப்ப தாகவும், செய்திகள் வருகின்றனர். ஆளுநர் மாளிகை அருகில் நடத்தப்பட்டிருக்கும் இந்தத் தாக்குதலை தமுமுக  சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறது.  தமுமுக நடத்தவுள்ள  ஜனநாயகப் போராட்டத்தை திசைச் திருப்பும் விதமாக  இதுபோன்ற சம்பவத்தைச் சமூகவிரோதிகள் செய்துள்ளதாகக் கருத வேண்டியுள்ளது. பெட்ரோல் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபரை  மட்டும் கைது செய்யாமல் அவரது பின்னணியில் உள்ளவர் களையும் தமிழகக் காவல்துறை விசாரித்து விரைவில் கைது செய்ய வேண்டும் என தமுமுக கேட்டுக்கொள்வதாக தமுமுக தலைவர் எம்.எச். ஜவா`ஹிருல்லா ஓர் அறிக்கை யில் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெரிய வெங்காயம்  விலை அதிகரித்தது

சென்னை,அக்.25- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது.   தற்போது வெளி மார்க்கெட்டில் சில்லரை விற்பனை கடைகளில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கடந்த வாரம் மொத்த விற்பனையில் ஒரு கிலோ நாசிக் வெங்காயம் ரூ. 34-க்கு விற்கப்பட்ட நிலையில் புதனன்று அதன் விலை  ரூ.54 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில்  ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.70 ஆக உயர்ந்தது. வரத்து குறைவு காரணமாக பெரிய வெங்காயத்தின் விலையும் அதிகரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

 திருவள்ளூர்,அக்.25- ஊத்துக்கோட்டை அருகே உள்ள மோகூர், காலனி பகுதியை சேர்ந்தவர் பிரதாப் (வயது30). தொழிலாளி. அதேபகுதியை சேர்ந்த பிரதாப்பின் நண்பர் ஒருவர் புதிதாக வீடு கட்டி உள்ளார். இதற்கு குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் பிரதாப் ஈடுபட்டார். அப்போது அருகில் இருந்த ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் அருகே பள்ளம் தோண்டினார். இதில் அந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து பிரதாப் மீது விழுந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் புதனன்று சிகிச்சை பலனின்றி பிரதாப்  இறந்தார்.

 குடியரசு தலைவர் சென்னை வருகையில்  எந்த மாற்றமும் இல்லை- டிஜிபி

சென்னை,அக்.25-  சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள  இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் 8-வது பட்ட மளிப்பு விழா வரும் 27-ம் தேதி நடக்கிறது. இந்த விழாவில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்தி னராகப் பங்கேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி கவுரவிக்க உள்ளார். விழா வில் பங்கேற்க, குடியரசுத் தலைவர்   வியாழனன்று இரவு 7.30 மணிக்கு சென்னை  வருவதாக அறிவிக்கப் பட்டது. இந்நிலையில்,  சென்னை, கிண்டி ஆளுநர்  மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பாது காப்பு மிகுந்த ஆளுநர் மாளிகை முன்பு  பெட் ்ரோல் குண்டு வீசப்பட்டது. பாதுகாப்பு மிகுந்த ஆளு நர் மாளிகை முன்பு பெட் ரோல் குண்டு வீசப்பட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக, தேனாம்பேட்டையைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பவரை காவல்துறையினர் கைது  செய்தனர். இதன் எதிரொலி யால், குடியரசு தலைவர் சென்னை வருகையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்வி எழும்பியது.

உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகள் மனித சங்கிலி

விழுப்புரம்,அக்.25-  உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  உலக உயரம் வளர்ச்சி தடைப்பட்ட மாற்றுத்திறனாளி கள் தினத்தை முன்னிட்டு நடை பெற்ற இந்த போராட்டத்தில் சங்க மாவட்ட அமைப்பு குழு தலை வர் ஆர்.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் மாநில துணைத்தலைவர் வி.ராதா கிருஷ்ணன், மாவட்ட செய லாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்டத் தலைவர் பி.முருகன், மாவட்ட பொருளாளர் ஜி. ஜெயக்குமார்,மாவட்ட துணை செயலாளர் எம்.முத்துவேல் ஆகியோர் கலந்து கொண்டு உயரம் வளர்ச்சி தடைப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கடும் ஊனமுள்ளவர்களாக அறி வித்து, அரசு அனைத்து திட்டங்களிலும் முன்னுரிமை   வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.