சென்னை, பிப். 5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதி, கல்லுகுட்டை கிளை உறுப்பினர் தோழர் விஜயா உடல் நலக்குறை வால் புதனன்று (பிப்.5) காலமானார். அவருக்கு வயது 67. அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சோழிங்கநல்லூர் பகுதித் தலைவராக செயல்பட்ட தோழர் விஜயா, கல்லு குட்டை பகுதியில் குடியி ருப்புகளை பாதுகாக்க போராட்டம் பல கண்டவர். பெருங்குடி, அம்பேத்கர் புரட்சி நகர், பெரி யார் தெருவில் வைக்கப் பட்டிருந்த உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக் குழு உறுப்பினர் கே. வனஜகுமாரி, சோழிங்க நல்லூர் பகுதிச் செய லாளர் ப.ஜெயவேல், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி எம்.சி., என்.குமரன், பகுதிக்குழு உறுப்பினர்கள் கே.குண சேகரன், பி.சாந்தா, மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சரவணச்செல்வி, செயலாளர் ம.சித்ரகலா, பொருளாளர் ஜெ.ஜூலியட் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து அவரது உடல் பெருங்குடி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.