districts

img

நெய்வேலியில் தோழர் சங்கரன் படத்திறப்பு கே.பாலகிருஷ்ணன் பங்கேற்பு

கடலூர், ஜூன். 2- நெய்வேலியில் மூத்த தோழர் எஸ்.சங்கரன் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் படத்தை திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். நெய்வேலி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஆர்.பாலமுருகன்  தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர்  ஜி.சுகுமாறன், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில தலைவர் பா.ஜான்சி ராணி, சிபிஎம் மாவட்ட செயலாளர்  கோ.மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ். ஜி.ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம், எஸ்.திருஅரசு, ஜி. ஆர். ரவிச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஜெயராமன், ராஜா, சீனுவாசன், மாதவி, மூத்த தலைவர்கள் மூசா, முத்துவேல், அண்ணாமலை பல்கலைக்கழக பணியாளர் சங்க நிர்வாகி மதியழகன், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் தண்டபாணி, முன்னாள் சிஐடியு தலைவர் வேல்முருகன், குப்புசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

;