தோழர் மைதிலி சிவராமனின் 2ஆம் ஆண்டு நினைவு சொற்பொழிவு ஞாயிறன்று (மே 28) கிண்டியில் நடைபெற்றது. இந்திய சமூக விஞ்ஞான கழகம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மூத்த தொழிற்சங்கத் தலைவர் வே.மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் மைதிலி சிவராமன் எழுதி வெளிவராத கட்டுரைகளை தொகுத்து பாரதி பதிப்பகம் பதிப்பித்துள்ள ‘கியூபா-காஸ்ட்ரோ-சே: வெறும் பெயரல்ல அரசியல் அறிவுரை’ எனும் நூலை சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு வெளியிட, டாக்டர் கல்பனா கருணாகரன் பெற்றுக் கொண்டார். சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், நூல் தொகுப்பாசிரியர் ச.லெனின் ஆகியோர் உடன் உள்ளனர்.