districts

img

பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டும் துணைத் தலைவரின் கணவர்

விழுப்புரம், செப்.4- விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், ஆனங்கூர் கிராமத்தில் வசிக்கும் பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த வர் சங்கீதா.  இவர் ஊராட்சி மன்றத் தலைவர்.  இந்த ஊராட்சி மன்றத்தில் ஆறு வார்டுகள் உள்ளன.  அதில் ஒரு வார்டு பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப் பட்டுள்ளது.  மாற்று சமூகத்தை சேர்ந்த சித்ரா ஊராட்சி மன்ற துணைத் தலை வராக தேர்வு செய்யப்பட்டார். சங்கீதா ஊராட்சி மன்றத் தலைவராக வெற்றி பெற்று பதவியேற்றது முதல் மக்கள் பணி செய்ய விடாமல், ஊராட்சி மன்ற நிர்வாகத்தை முறையாக நடத்த விடாமல் துணைத்தலைவரின் கணவர் குண சேகரன்.  தகராறு செய்து வருவதாக சங்கீதா கூறினார். மின்சாரம், குடிநீர், சாலை மற்றும் ஊராட்சி பணியாளர்களுக்கு ஊதி யம் உள்ளிட்ட எதுவும் கொடுக்க முடிய வில்லை. காரணம், டிஜிட்டல்  கீ தராமல் இழுத்தடிக்கிறார். இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த என்னை பொதுமக்கள் முன்னிலையில் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி வருகிறார். இது எனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்படுத்தியுள்ளது.  மேலும், ஊராட்சி மன்ற பணிகளில் நான் தலையிடக் கூடாது என்றும் மீறி னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வருகிறார்.  தலைவர் நாற்காலி யில் அமர கூடாது என்றும் ஊராட்சி மன்ற பணிகளில் நான் தலையிடக் கூடாது. ஊராட்சி மன்ற நிர்வாகத்தை நான் தான் செய்வேன். இதனால், நீ ஊராட்சி மன்ற அலுவலகம் பக்கமே தலை வைக்கக் கூடாது என்று தனது சாதியை சொல்லி இழிவாக பேசி வரு கிறார். இந்த பிரச்சனைகள் குறித்து வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலர், வல்லம் ஒன்றிய பெருந் தலைவரிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.  இதையடுத்து, மாவட்ட ஆட்சி யரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இதில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், அவரது கணவர், வார்டு உறுப்பினர் ஒருவரும் என்னை அச்சுறுத்தி தற்கொலைக்கு தூண்டு கிறார்கள். இதனால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கூட்டுக் கையொப்பம் இடும் அதிகாரத்தை ரத்து செய்து முழு அதி காரத்தை தனக்கு வழங்க வேண்டும் என்றும் சங்கீதா தெரிவித்துள்ளார்.