தோழர் சுரேஷ் காலமானார்
சென்னை, டிச.26- மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி திருவிக நகர் பகுதியின் முன்னணி தோழர் சுரேஷ் மாரடைப்பால் காலமானார் அவருக்கு வயது51, வடசென்னையில் ஒன்று பட்ட புரசை கமிட்டியாக இருந்தபோது சிபிஎம் கிளைச் செயலாளராக செயல்பட்டவர், பாவேந்தர் கலைக்குழுவின் திறமை யான வீதிநாடக கலை ஞனாக களப்பணியாற்றிய வர். இயக்கப்பணியில் கட்சியையும் தாண்டி பொது மக்களின் நன்மதிப்பை பெற்றவர். புதிய தோழர்க ளுக்கு போராட்டயுக்தி, காவல்துறை அரசு அதிகாரிகள் மற்றும் பிற அரசியல்கட்சியினரை கையாளும் முறைகளை சளைக்காமல் பயிற்று விக்கும் குணம் கொண்டி ருந்தார். திருவிக நகரில் எஸ்விஎம் நகர்கிளையின் செயலாளராக பணி யாற்றி வந்தார். தற்போது காஞ்சிபுரத்தில் குடிபெயர்ந்து இயக்கப் பணியாற்றி வந்தார். அவரது மரணம் சிபிஎம் வடசென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஈடுசெய்யமுடியாத இழப்பாகும். காஞ்சிபுரம் சிங்காரி வாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது உடலுக்கு முன்னாள் கவுன்சிலர் பா.தேவி,சிபிஎம் வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.கார்த்திஷ்குமார், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பா.ஹேமாவதி (கொளத்தூர்), வீ.செல்வ ராஜ் (திருவிக நகர்), வழக்க றிஞர் ஷினு, அமாவாசை, மோகன், சுரேஷ், கார்திக், புகழேந்தி உள்ளிட்ட ஏராளமானோர் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தொழில்நுட்பத்தின்மூலம் சமூக சவால்களுக்கு தீர்வுகாண அழைப்பு பள்ளி மாணவர்களுக்கு போட்டி
சென்னை, டிச. 26- இளம் இந்திய கண்டுபிடிப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான விவோ நிறுவனம்,விவோ இக்னைட்: தொழில்நுட்ப கண்டுபிடிப்பு போட்டியை 3வது ஆண்டாக அறிவித்துள்ளது. சமூக சவால்களுக்கு தொழில்நுட்பம் மூலம் புதுமையான தீர்வுகளை வழங்க நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. மென்பொருள் - தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், விவசாயம் மற்றும்கால நிலைமாற்றம், சமூக மேம்பாட்டு கண்டுபிடிப்புகள், நிலையான வளர்ச்சி இலக்குகள் என்னும் பல்வேறு தலைப்புகளில் மாணவர்கள் தனித் தனியாகவும் மற்றும் அதிகபட்சம் 3 பேர் கொண்ட குழுவாகவும் தங்கள் தீர்வுகளை வழங்கலாம். இந்த போட்டியானது 3கட்டங்களாக நடத்தப்படும், 2025 ஜூன் மாதம் 8-ந்தேதி இறுதிப் போட்டி தில்லியில் நடைபெறும். அதில் 10 முன்மாதிரி திட்டங்கள் நடுவர் குழுவால் தேர்வு செய்யப்பட்டு அதற்கு ரூ.35 லட்ச கல்வி உதவித் தொகை மற்றும் பரிசு ஆகியவை வழங்கப்படும். மாணவர்கள் http://www.vivoignite.com-ல் பதிவு செய்து கொள்ளலாம்.