வேலூர், ஜூலை 6- வேலூர் மாநகரின் முக்கிய போக்கு வரத்து சாலையான கிரீன் சர்க்கிள் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 4 பக்கங்களில் இருந்து வரும் வாகனங்களால் ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கம் சாலையை கடக்க முடியாமல் பாதசாரிகள் சிரமப்பட்டு வந்தனர். எனவே பாதசாரிகள் வசதிக்காக கிரீன் சர்க்கிள் பகுதியை கடந்து செல்ல சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு வருவாய் துறை மற்றும் கட்டிட பொறியாளர்கள் கொண்ட குழுவினர் கிரீன் சர்க்கிள் பகுதியில் சுரங்க நடைபாதை அமைப்பது தொடர்பாக கடந்த மே மாதம் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் சுரங்க பாதை அமைப்பதற்கான முதல் கட்ட பணி வெள்ளியன்று (ஜூலை 5) தொடங்கியது. இதில் நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மேற்பார்வையில் கிரீன் சர்க்கிள் பகுதியின் நடுவே உள்ள பூங்காவின் ஒரு பகுதி ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.