கள்ளக்குறிச்சி,ஜன.25 – உளுந்தூர்பேட்டை வட்டம் உ.செல்லூர் கிராமத்தில் சேஷ நதியின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி துவங்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை வட்டத்தில் உள்ள உ.செல்லூர் கிரா மத்தில் சேஷ நதியின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என்றுதமிழ்நாடு விவசாயி கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவ சாயிகள் சங்கம் சார்பில் 2024 ஜனவரி 31 அன்று மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கோரிக்கை மனு மற்றும் கடிதம் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில், சேஷ நதியின் குறுக்கே ரூ.7.95 கோடி செலவில் தடுப்பணை கட்டுவதற்கு அனுமதி கிடைத்தது. இதன் கட்டுமான பணிகளை சட்டமன்ற உறுப்பி னர் ஏ.ஜே.மணிகண்டன், மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ்.பிரசாத் ஆகியோர் துவக்கி வைத்தனர்.புதிய அணை கட்டுவதன் மூலம் 3 கிராமங்களைச் சேர்ந்த 4,600 குடும்பங்கள் பயன் பெறும். இதன் மூலம் பாதூர், களவனூர் ஏரிகள் நிரம்பி 607 ஏக்கர் விவசாய நிலங்கள் முழுமையாக பாசன வசதி பெறும். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் டி. ஏழு மலை,மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.செந்தில், கரும்பு விவசாய சங்க தலைவர் ஜோதிராமன், ஒன்றிய குழு தலைவர் ராம லிங்கம், ஆத்மா குழு தலைவர் முருகன், திரு நாவலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.