districts

img

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் வசதிகள்

சிதம்பரம், ஆக 18- கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லக்கூடிய வகையில் சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரம் சுற்றுலா மையம்,  சாமியார் பேட்டை கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் ஆய்வு செய்தார். சாமியார்பேட்டை கடற்கரை மற்றும் பிச்சா வரம் சுற்றுலா மையத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகை யில் உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள தேர்வு தேர்வு செய்யப்பட்ட இடங்கள் அவர் ஆய்வு மேற்கொண்டார். சுற்றுலா மையம் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது நடைபெறும் பணி களை துரிதப்படுத்த நட வடிக்கை மேற்கொள்ளப் படும் என்றார்.  இதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டை நீர் விளையாட்டு பூங்கா மற்றும் அன்னங்கோவில் மீன்பிடி துறைமுகத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் சிதம்பரம் சாராட்சியர் ராஷ்மிராணி,  மாவட்ட சுற்றுலா அலுவலர் கண்ணன்,  துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உடனி ருந்தனர்.