வேலூர், செப்.8- இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) வேலூர்மாவட்டத் தலைவர் வேலூர் தெற்கு தாலுகா குழுஉறுப்பினருமான து.முரளின் தாயார் வள்ளியம்மாள் (செப். 7) மரணமடைந்தார். அவரது உடலுக்கு சிபிஎம் வேலூர்- திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.நாராயணன், பி.காத்தவராயன், தாலுகா செயலாளர் எஸ்.செல்வி, மாவட்ட குழு உறுப்பினர் சி.எஸ்.மகாலிங்கம் மற்றும் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன் தலைமையில் சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர்.இறுதி நிகழ்வுகள் முடித்த பிறகு அவரது உடல் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. தாயை இழந்த முரளியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஆட்டோ தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் எம்.சிவாஜி இரங்கல் தெரிவித்தார்.