திருவள்ளூர், பிப்.16- சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் பணியாற்றுகின்ற ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சிஐடியு வலி யுறுத்தியுள்ளது. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கூட்டம், ஞாயிறன்று (பிப் 16), தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கஸ் யூனியன் பொருளாளர் ஜி.விநாயக மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. சிபிசிஎல் டிசாலினேஷன் பிளான்ட், ஐஓடிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணியாற்றும் ஒப்பந்த தொழி லாளர்களுக்கு அளிக்க வேண்டிய சட்ட ரீதியாக சலுகைகளை வழங்க வேண்டும். போனஸ், இஎஸ்ஐ, குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் சிஐடியு மாநில துணைத் தலை வர் கே.விஜயன், சென்னை பெட்ரோலியம் நிரந்தர தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜேஷ் கண்ணன், சத்ய முருகன், பொருளாளர் கார்த்தி வட சென்னை சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெயராமன் என்டிஇசிஎல் செயலாளர் எச். சதிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.