districts

img

விற்பனைக்குழு உறுப்பினர் தேர்தல் சிஐடியு அணி அமோக வெற்றி!

கடலூர், செப்.1- கடலூர் மாநகராட்சியில் நடைபெற்ற விற்பனைக்குழு உறுப்பினர் தேர்தலில் சிஐடியு அணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் வியாபாரத்தை முறைப்படுத்தும் சட்ட விதிகள் 2015 படி நகர விற்பனை குழு உறுப்பினர் தேர்தலுக்கான தேர்தல் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கடலூர் மாநகராட்சி பகுதியில் 3,200 க்கும் மேற்பட்ட பதிவு பெற்ற சாலையோர வியாபாரிகள் உள்ளனர்.  இவர்களுக்கு வாக்கு சீட்டு முறைப்படி இந்த தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி நகர அமைப்பு அலுவலர் ராஜசேகரன் செயல்பட்டார். மொத்தம் 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வேண்டிய நிலையில் பிற்படுத்தப்பட்டோர் உறுப்பினர் வி.குளோப், சிறுபான்மையினர் உறுப்பினர் அப்துல் காதர் ஆகிய இருவரும்  போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டனர். மற்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய சனிக்கிழமை காலை முதல் மூன்று மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனை எடுத்து பின்னர் இரவு 8 மணி வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தாழ்த்தப்பட்டோர் வகுப்பினர் ரத்தினவேல் மகளிர் வகுப்பினர் எழிலரசி மாற்றுத்திறனாளிகள் வகுப்பினர் மனோகர் பொது வகுப்பினர் ஹரி கிருஷ்ணன்  ஆகியோர் வெற்றி பெற்றனர். தேர்வு செய்யப்பட்ட ஆறு உறுப்பினர்களில் 3 பேர் சிஐடியு சார்பிலும், 2 பேர் ஏஐடியுசி சார்பிலும், திமுக ஆதரவில் போட்டியிட்ட ஒருவரும் வெற்றி பெற்றனர். சிஐடியு அணி சார்பாக போட்டியிட்ட 6 பேர் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.