சென்னை, டிச. 29- புதிய மோட்டார் வாகன சட்டத்தின் மூலம் மோட்டார் வாகன தொழிலை சீரழிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக போராட தொழி லாளர்கள் அணி திரள வேண்டும் என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தெரிவித்தார். சென்னை பெருநகர் மோட்டார் வாகன தொழிலாளர் சங்கத்தின் அம்பத்தூர் பகுதி 45ஆவது ஆண்டு விழா தோழர்கள் பி.என்.உண்ணி, சு.லெனின் சுந்தர் ஆகியோர் நினை வரங்கில் ஞாயிறன்று (டிச. 29) நடை பெற்றது. சங்க கொடியை மூத்த உறுப்பினர் என்.நாராயணன் ஏற்றி வைத்தார். பகுதி நிர்வாகி ஆர்.சந்தானம் வரவேற்றார். பகுதி தலைவர் சு.பால்சாமி தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்ட சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் பேசுகையில், “ ஒன்றிய ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளால் மோட்டார் வாகன தொழில் கடுமையான நெருக்கடியை சந்தித்துக் கொண்டுள்ளது என்றார். தமிழ்நாட்டில் ஐடி நிறுவனங்கள் பெருகிவிட்டன. பழைய முறையில் தொழிற்சாலைகள் இல்லை. இதனால் முன்பு போல் லோடு இல்லை. இந்த சூழ்நிலையில் நிம்மதியாக இந்த தொழிலை மேற்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார். வெள்ளைக்காரர்களின் ஆட்சியிலேயே விபத்து நடந்து உயிரிழப்பு ஏற்பட்டால் அதிகபட்ச தண்டனை 3 ஆண்டுகள் சிறை. ஆனால் தற்போது அதை 10 ஆண்டுகள் சிறை என சட்டத்தை மாற்றி விட்டார்கள். அப்படி யென்றால் விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் அந்த ஓட்டுநரின் வாழ்க்கை அதோடு முடிந்து விடும். 10 ஆண்டுகள் சிறையில் இருந்து விட்டு அவர் வெளியே வரும் போது, மீண்டும் வாகனத்தை இயக்க முடியுமா ? என்று கேள்வி எழுப்பினார். ஒன்றிய பாஜக அரசு, மிகக் கொடூரமான முறையில் மோட்டார் வாகன சட்டத்தை கொண்டுவர முயற்சித்தது. அதை எதிர்த்து அகில இந்திய அளவில் சிஐடியு நடத்திய மிகப்பெரிய போராட்டத்தின் விளைவாக கைவிடப்பட்டது. ஆனாலும், பழைய சட்டத்தில் திருத்தம் செய்தார்கள். அந்த திருத்தங்களும் தொழிலாளர்களுக்கு எதிராகத்தான் உள்ளது. இதற்கு எதிராகவும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் போராடிக் கொண்டி ருக்கிறோம் எனவும் கூறினார்.
சமூக பாதுகாப்பு இல்லாத அவலம்
முறைசார்ந்த தொழிலை விட, மிகப்பெரிய அளவில் இந்த சமூகத்தை இயக்குகிற, நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிற தொழில்தான் மோட்டார் வாகன தொழில். அப்படிப்பட்ட தொழிலில் ஈடுபடக் கூடிய தொழிலாளிக்கு வயதான காலத்தில் சமூக பாது காப்பு கிடையாது. இந்த தொழி லாளர்களின் சமூக பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று கோருகிறோம். கால, நேரம் இல்லாமல் கடுமையாக உழைக்கக் கூடிய ஓட்டுநர்களுக்கு மூலவியாதி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. உலக அளவில் ஆய்வு நடத்தி மோட்டார் வாகன தொழிலாளர்கள் குறித்து சிறப்பு கவனம், பாதுகாப்பு தேவை என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 70 வயதை கடந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஆனால் மோட்டார் வாகன தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு மருத்துவக் காப்பீடு இல்லை. உண்மையிலேயே மருத்துவக் காப்பீடு தேவைப்படுகிற தொழில் இது. ஆனால் இதுகுறித்தெல்லாம் ஆட்சியாளர்கள் கவலைப்படுவ தில்லை. ஒன்றிய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக புதிய மோட்டார் வாகன சட்டத்தை கொண்டுவர முயற்சித்துக் கொண்டிருக்கிறது. எனவே இதற்கு எதிரான போராட்டங்களை வலுவாக முன்னெடுக்க வேண்டி யுள்ளது. உங்களின் அனைத்து போராட்டங்களுக்கும் சிஐடியு துணை நிற்கும் என்றும் சவுந்தர ராசன் தெரிவித்தார். சாலை போக்குவரத்து சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் பேசுகையில், அம்பத்தூர் பகுதியில் சங்கத்தை துவக்கும் போது, காவல்துறை தாக்குதல், ரவுடிகள் தாக்குதல் என பல முனைகளில் இருந்தும் மிரட்டினர். இவை அனைத்தையும் முறியடித்த்து செங்கொடி சங்கம் என்றார். ஒன்றிய பாஜக அரசு, தொழி லாளர்களுக்கு ஆதரவான சட்டங்களை அனைத்தையும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான சட்டங்களாக மாற்றி வருகின்றன. வாடகை கட்டணத்தை வாகனத்தின் உரிமையாளர் நிர்ணயிக்க முடியவில்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் செயலிகள்தான் நிர்ணயிக்கின்றன. மோட்டார் வாகன தொழிலையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கைப்பற்ற முயற்சிக்கின்றன. இதை அரசு முறைப்படுத்த வேண்டும் என்றார். முன்னதாக “மோட்டார் வாகன சங்கம் கடந்து வந்த பாதை” என்ற தலைப்பில் பகுதிச் செயலாளர் அ.ராயப்பன் பேசினார். அம்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் ஆர்.ஜெயராமன், மோட்டார் வாகன சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.குப்புசாமி, பொருளாளர் டி.ஜெ.கிருஷ்ணமூர்த்தி, சாலை போக்கு வரத்து சம்மேளன துணைத் தலைவர்கள் ஏ.பி.அன்பழகன், பா.பாலகிருஷ்ணன், உதவிச் செயலாளர் எம்.உதயகுமார், மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.கே.முருகேஷ், டி.ரமேஷ், மாநகர போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.தயானந்தம், அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் இன்ஜினியரிங் எம்ப்ளாயீஸ் யூனியன் தலைவர் கே.ரவிச்சந்திரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். எம்.பி.மோகன் நன்றி கூறினார். முன்னதாக மூத்த உறுப்பினர்களுக்கு அ.சவுந்தர ராசன் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.மணி மேகலை, சிபிஐ பகுதிச் செய லாளர் இரா.விஜயகுமார், மாமன்ற உறுப்பினர் எம்.கமல், சங்கத்தின் நிர்வாகிகள் சுந்தரம், சேவியர், வெங்கடேசன், சிவ சங்கர், வேலாயுதம், இளங்கோ, செல்வம், அரசு, சிதம்பரம், தில்லி (எ) நாகராஜ், கேசவன் சங்கர், கிருஷ்ணமூர்த்தி, ஜெயப்பிர காஷ், ஜெயக்குமார் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.