செங்கல்பட்டு,செப்.30- செங்கல்பட்டில் ஒன்றிய அரசின் தடுப்பூசி தயாரிக்கும் மையத்தை உடனடியாக திறக்க வலி யுறுத்தி சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டத்திற்குட்பட்ட திரு மணியில் 110 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் ரூ. 600 கோடி முதலீட்டில் ஒன்றிய அரசு நிறுவனமான எச்எல்எல் பயோடெக் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் அமைக்கப் பட்டுள்ளது. குழந்தைகளுக்கான மஞ்சள் காமாலை தடுப்பூசி, வெறிநாய் தடுப்பூசி, தட்டம்மை தடுப்பூசி போன்ற 9 வகை யான தடுப்பூசிகள் ரூ.56 கோடியே 40, லட்சம் டோஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யக்கூடிய உலக தரத்திலான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உற்பத்தி தொடங்காத காரணத்தால் அதி நவீன இயந்திரங்களும் உப கரணங்களும் பல ஆண்டு களுக்கு மேலாக பய னற்ற நிலையில் போடப் பட்டுள்ளது. இந்நிறு வனத்தில் உற்பத்தி தொடங்குமேயானால் மிகக் குறைந்த விலையில் பொது மக்களுக்கு தடுப்பூசிகள் கிடைக்கும். இந்நிலையில் இந்நிறு வனத்தை உடனடியாக துவக்கி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும், நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு அளவில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். 3வது பிஆர்சியை அமல்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள பதவி உயர்வு கால தாமதமின்றி ஊழியர்களுக்கு வழங்க வேண்டும், நிலுவை யில் உள்ள போனஸ் தொகையை வழங்குவது டன் நிலுவையில் உள்ள எல்டிசியை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி எச்எல்எல் பயோடெக் தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் வலியுறுத்தி நிறுவனத்தின் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி தலைமையில் செயலாளர் க.பகத்சிங் தாஸ், மாவட்ட நிர்வாகிகள் கே.பழனிச்சாமி செல்வகுமார், மயில் வாகனம், சிபிஎம் நிர்வாகி அருணாசலம், சங்க நிர்வாகிகள் வினாயக மூர்த்தி, எல்லப்பன் உள்ளிட்ட பலர் பேசினர்.