districts

img

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் பயிற்சி

புதுச்சேரி, டிச.19- ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் பயிற்சி கொடுக்கும் அவல மான நிலை இந்திய ஆட்சியாளர்களால் ஏற்பட்டுள்ளது என்று   ஆர்.கருமலையான் குற்றஞ்சாட்டினார். தேசிய ஓய்வூதியர் தின விழாவையொட்டி புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் புதன்கிழமை (டிச.18) சிறப்பு கூட்டம் நடை பெற்றது. தேசிய ஓய்வூதி யர் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக்குழு, இபிஎஃப் பென்ஷனர்கள் நல சங்கம், ஓய்வு பெற்ற அங்கன்வாடி பணியாளர்கள் நல சங்கம் ஆகியோர் சார்பில் நடை பெற்ற கூட்டத்திற்கு ஒருங்கி ணைப்பு குழு தலைவர்  நடராஜன் தலைமை தாங்கி னார். சிஐடியு அகில இந்திய செயலாளரும், இபிஎப்ஓ மத்திய அறக்கட்டளையின் உறுப்பினர்களில் ஒருவரான ஆர். கருமலை யான் விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது: புதிய பென்ஷன் திட்டம் 2004 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அப்போது இந்த பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் என்று இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் வலியுறுத்தப்பட்டது. பின்னர்  இடதுசாரிகள் ஆதர வோடு அமைந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை, புதிய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த விடவில்லை. பின்னர் இடதுசாரிகள் ஆதரவு இல்லாமல் அமைந்த  மன்மோகன் சிங் தலைமையிலான காங்கி ரஸ் அரசு இடதுசாரி கட்சி களின் எதிர்ப்பையும் மீறி  பாஜக எம்பிக்களின் ஆதர வோடு புதிய பென்ஷன் திட்டத்தை 2011 ஆம் ஆண்டு நிறைவேற்றியது. இன்றைக்கு நாடு முழுவதும் ஓய்வூதியர்க ளின் பல்வேறு பிரச்சனை கள் முன்னுக்கு வந்துள்ளது. அத்தகைய பிரச்சனைகளை விவாதிக்க மறுக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற கோஷத்தை முன்னுக்கு கொண்டு வருகிறது.

ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு தனி யார் கார்ப்பரேட் நிறு வனங்கள் பயிற்சி எடுக்கும் அவலநிலை இந்திய ஆட்சியாளர்களால் ஏற்பட்டுள்ளது. இந்திய தொழிலாளி வர்க்கம்   போராடி பெற்ற உரிமை களான 8 மணி நேரம் வேலை என்ற உரிமையை ஐஏஎஸ் அதிகாரிகள் மறுக்கும் அளவிற்கு தனியார் முதலாளிகள்  அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். எனவேதான் இன்றைய ஆட்சியாளர்கள் மக்க ளுக்கான ஆட்சியை நடத்த வில்லை.மாறாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கான ஆட்சியே  நடத்தி வரு கின்றனர். இதனை எதிர்த்து சிஐடியு, இடதுசாரிகள் சார்பில் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஓய்வூதியர்களின் எண்ணற்ற பிரச்சனைகளை தீர்க்க அனைத்துப் பகுதி ஓய்வூதியர்களையும் அணி திரட்ட  வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். கூட்டத்தில் சிஐடியு புதுச்சேரி மாநில தலைவர் பிரபுராஜ், உதவி தலைவர் கொளஞ்சியப்பன், ஓய்வூதியர் சங்க நிர்வாகி கள் பிரேமதாசன், ராதா கிருஷ்ணன், முத்து, ராமகிருஷ்ணன்,  சண்முக சுந்தரம்,நடராஜன் தட்சிணா மூர்த்தி, குணசேகரன் மண்ணாங்கட்டி, கலிய மூர்த்தி சண்முகம், விஸ்வ நாதன் உட்பட திரளான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.