districts

img

சுரங்கப்பாதைக்கு பதில் நடைமேம்பாலம் அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்

சிதம்பரம், ஜூலை 9- சிதம்பரம் அருகே தீத்தாம்பாளையம் கிராமத்தின் வழியாக விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது.   இந்த பணிகள் 80 விழுக்காடு முடி வுற்ற நிலையில், தீத்தாம்பாளை யம் கிராமத்தின் அருகே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. மேம்பாலத்தின் கீழே அப்பகுதியில் பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதி களுக்கு செல்லும் வகை யில் சுரங்கப்பாதை அமைக்கப் பட்டுள்ளது.  இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மழைக் காலங்களில் அதில் தண்ணீர் செல்லும் என்பதால் நடைமேம்பாலமாக அமைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து வரு கின்றனர்.   பொதுமக்களின் கோரிக்கையை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதையடுத்து, சிதம்பரம் - கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் மறி யல் செய்தனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரங்கிப்பேட்டை காவல் துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.