திருவள்ளூர், அக் 31- பழவேற்காட்டில் இயங்கி வரும் டச்சு அகாடமி நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடை பெற்றது. இந்த அறிவியல் கண்காட்சியில் மழலையர்களால் செய்து வைக்கப்பட்ட அறிவியல் பூர்வமான பல எடுத்துக் காட்டாக கண்காட்சி பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. சென்னை சமூக சேவை சங்கத்தினுடைய இயக்குநர் தந்தை எம்.வி.ஜேக்கப் துவக்கி வைத்த நிகழ்ச்சியில், செயின்ட் ஜோசப் பள்ளி மற்றும் ஆர்.சி.எம் பள்ளி தலைமை ஆசிரியைகள் முன்னிலை வகித்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் டெய்சி ராணி,பள்ளியின் பொறுப்பாளர் அருள் செல்வி,கோட்டைக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் கே.சம்பத்,எம்.எஸ்.எஸ். நிர்வாக பொறுப் பாளரான ஹாஜா மொய்தீன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களும் பங்கேற்று கண்காட்சியினை பார்வையிட்டனர்.