districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் வீடு, மனை கண்காட்சி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்,14 தொடங்கி வைக்கிறார்

சென்னை, பிப்.7- முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வீட்டுவசதி கண்காட்ச யான ‘பேர்ப்ரோ 2025’  சென்னையில் வரும் 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது. இந்த கண்காட்சியை சென்னை வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (பிப்.14) தொடங்கி வைக்கி றார். இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் 17வது ஆண்டாக இதற்கு எற்பாடு செய்துள் ளது. இந்த ஆண்டு கண்காட்சியானது பிர மாண்டமாகவும் சிறப்பு வாய்ந்ததாகவும் இருக்கும் என்று கிரெடாய் தென் மண்டலத் துணைத் தலைவர் எஸ். ஸ்ரீதரன் கூறினார். ஏனெனில், வீடு வாங்குபவர்களுக்கு 32.5 மில்லியன் சதுர அடி குடியிருப்புகள், 0.25 மில்லியன் சதுர அடி வணிக இடம் மற்றும் 325 ஏக்கர் வீட்டு மனைகள் என 500க்கும் மேற்பட்ட திட்டங்கள் இந்த கண்காட்சியில் இடம்பெற உள்ளது. இந்த கண்காட்சியில் கிரெடாய் உறுப்பி னர்களான 80க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. அத்துடன் பாரத ஸ்டேட் வங்கி உள்பட 5  முக்கிய வங்கிகள் பங்கேற்று, வாடிக்கை யாளர்களுக்கு  கடன் வழங்க உள்ளன. சொத்து வாங்க விரும்புபவர்கள் தங்க ளுக்கு விருப்பமானதை தேர்வு செய்வ தோடு, அதற்கான கடன் ஒப்புதல் கடிதங் களைப் வங்கி மூலம் உடனடியாக பெறலாம் என்று ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் எம்.வி.ஆர். முரளி கிருஷ்ணா கூறினார்.   இந்த ஆண்டு, நடை பெறும் கண்காட்சியில் எஸ்பிஐ வங்கி சார்பில் பொதுமக்களின் வீடு மற்றும் மனை சம்பந்தமான சட்டப்பூர்வ கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் ஒரு சட்ட வல்லு நர் குழு எங்கள் அரங்கில் இருக்கும் என்று  தெரிவித்தார். பேட்டியின் போது கிரெடாய் சென்னை மண்டலத் தலைவர் முகமது அலி, கண்காட்சி  ஆலோசகர் எஸ். சிவகுருநாதன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.

தலைமுடி மாற்று சிகிச்சை 

சென்னை, பிப்.7- தலைமுடியை இழந்தவர்கள் இழந்து வருபவர்கள் என தலைமுடி பாதிப்பால் அவதிப்படுபவர்களுக்காக தலைமுடி மாற்று சிகிச்சை மற்றும் தலைமுடி மீட்பு சிகிச்சை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யூஜெனிக்ஸ் முடி அறிவியல் மையம் அறிவியல் பூர்வமாக நவீன மருத்துவத்தின் உதவியுடன் தலைமுடியை மீட்டு வருகிறது.இதனால் இந்த மையம் கிரிக்கெட் வீர்ர்கள், உலகளாவிய விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைத்துறை நட்சத்திரங்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.   தில்லி-என்சிஆர், மும்பை, ஐதராபாத் மற்றும் புவனேஸ்வரம் நவீன மருத்துவ மையங்களுடன், யூஜெனிக்ஸ் முடி மாற்ற தீர்வுகளுக்கான முன்னணி இடமாக மாறியுள்ளது.  கிரிக்கெட் பிரபலங்களான மொஹம்மத் ஷமி, ரவி ஷாஸ்திரி, மொஹம்மத் அசாருதின் மற்றும் மைக்கேல் பெவன் ஆகியோர் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர் என்று யூஜெனிக்ஸ்  தலைவரும்  உலக புகழ்பெற்ற நிபுணர்களான டாக்டர் பிரதீப் சேதி மற்றும் டாக்டர் அரிகா பன்சல் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு  பாலியல் தொல்லை: இளைஞர் கைது

வேலூர், பிப்.7 - கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் பெண்கள் மட்டுமே பயணிக்கும் பெட்டியில் ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்த ரேவதி என்ற பயணித்து வந்துள்ளார். இவர் நான்கு மாத கர்ப்பிணியாவார். பெண்கள் பயணிக்கும் அந்த பெட்டியில் திடீரென ஏறிய இளைஞர் ஒருவர், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அந்தப் பெண் கூச்சலிட்டிருக்கிறார். இதனால், கர்ப்பிணியை ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டதால் கை, கால் முறிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, ரயில்வே காவல்துறையினர் கர்ப்பிணியை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.  இதைத்தொடர்ந்து, காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பிறகு, ஹேமராஜ் என்ற வாலிபர்  கைது செய்தனர். அவர் கே.வி.குப்பம் பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. மேலும், சென்னையை சேர்ந்த பெண்ணை அழைத்து வந்து கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவர் மீது மேலும் பல வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்  கர்ப்பிணி என்றும் பாராமல் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விட்டதில் அப்பெண் படுகாயம் அடைந்துள்ளார். இச்சம்பவத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக டிஜிபி 3 நாட்களில் விரிவான அறிக்கை அளிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

என்.ஆர். காங். தமிழகத்திலும் போட்டி

புதுச்சேரி, பிப்.7- புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 15 ஆவது ஆண்டு விழா வெள்ளியன்று (பிப்.7) நடைபெற்றது.  இதில் பங்கேற்ற முதலமைச்சர் ரங்கசாமி பேசுகையில், “வருகிற சட்டப்பேரவைத் தேர்த லில், தமிழகத்திலும் என்.ஆர் காங்கிரஸ் கட்சி போட்டி யிடும். இது நமது கட்சியி னுடைய வளர்ச்சி, மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை. 2026 சட்டப்பேரவைத் தேர்த லில் பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்” என்றார்.

பெண் தூக்கிட்டு தற்கொலை 

சென்னை,பிப்.7- வியாசர்பாடி பி.வி காலனி கரிமேடு 1வது தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (28). இவரது மனைவி நித்யா (24), மகன் ரிஷி (2). தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் பார்த்திபன் நித்யாவை அடித்ததாககூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நித்யா  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நித்யாவின் தந்தை ராஜி (56) எம்.கே.பி.நகர் காவல் நிலை யத்தில் மருமகன் மீதுபுகார் அளித்துள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் சத்யாநந்த பால் (20). இவர், பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர், பத்ம நாபா நகர், சம்பந்தனார் தெருவில் உள்ள பழைய துணிகளை வாங்கி விற்கும் கடையில் பணிபுரிந்து வந்தார். சத்யாநந்த பால், ஒடிசாவில் உள்ள தனது பெற்றோரிடம் போனில் வாக்குவாதத்தில் ஈடுபட்டவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்கர் நகர் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இன்று குடிநீர் வாரியத்தின் குறைதீர் கூட்டம்

 சென்னை, பிப்.7-  சென்னை குடிநீர் வாரியத்தின் மாதாந்திர குறைதீர் கூட்டம், 15 பகுதி அலுவலகங்களிலும் சனிக்கிழமையன்று (பிப்.8) நடைபெறுகிறது. சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில், ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமை குறை தீர்க்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதத்துக்கான குறை தீர்க்கும் கூட்டம்  காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குடிநீர் வாரியத்தின் 15 இடங்க ளில் உள்ள பகுதி அலு வலகங்களிலும் நடை பெறும்.

மகன் அபகரித்த நிலத்தை மீட்டுத்தரக்கோரிக்கை 

விழுப்புரம், பிப்.7- விழுப்புரம் மாவட்டம், மேல்வாலை கிராமத்தை சேர்ந்தவர் அல்லிமுத்து. அவரது மனைவி கமலா. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இதில், மகன் அறிவுச் செல்வம் 2 ஏக்கர் 50 சென்ட் நிலத்தை அபகரித்து விட்டார். அதை மீட்டு தர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயிலில் தர்ணாவில் ஈடுபட்டார்.  அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர்.