districts

img

குடியிருப்புகளை பாதுகாக்கவே கணக்கெடுப்பு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

சென்னை, நவ. 25 - வேளச்சேரி ஏரியை ஒட்டியுள்ள நகர் குடியிருப்புகளை பாதுகாக்கவே (பயோ மெட்ரிக்) கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை யடுத்து வேளச்சேரி ஏரியை ஒட்டி உள்ள சசிநகர், காந்தி நகர், ஜெகநாதபுரம் பகுதியில் நீர்வளத்துறை அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்த கடந்த சில நாட்களாக முயற்சித்து வந்தனர். அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் சாலையில் அமர்ந்து போராடி வந்தனர். மக்களோடு மார்க்சிஸ்ட் கட்சியும் போராடி வருகிறது. இந்நிலையில் ஜெகநாதபுரம் பகுதி யில் போராட்டம் நடைபெற்று வரும் பகுதிக்கு திங்களன்று (நவ.25) அமைச்சர் மா.சுப்பிரமணியம் வந்தார். அவரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, வேளச்சேரி பகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி ஆகி யோர் மனு அளித்தார். அதில், “ஜெகநாதபுரம் மற்றும் ராஜ லெட்சுமி நகர், காந்தி நகர் மற்றும் சசி நகர் பகுதிகளில் சுமார் 70 வருடங்களுக்கு மேலாக வீடு கட்டி வசித்து வரும் குடி யிருப்புகளை அகற்றக் கூடாது. வீடுகளை காலி செய்ய வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு, பயோ மெட்ரிக் கணக்கெடுப்பு பணி நடத்துகிறது. இதி லிருந்து மக்களை பாதுக்காக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. இதன்பிறகு மக்களிடையே அமைச்சர் பேசுகையில், “2007ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து நீராதர பகுதி களை வகைமாற்றம் செய்ய முடிய வில்லை. பசுமை தீர்ப்பாயம் உத்தரவை யடுத்து தற்போது கணக்கெடுப்பு நடத்த வேண்டி உள்ளது. குடியிருப்புகளை கணக்கெடுத்துதான் அடுத்தகட்ட நட வடிக்கைக்கு செல்ல முடியும்; பாதுக்காக்க முடியும். முதலமைச்சர் மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க அறி வுறுத்தியுள்ளார். மக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். குடியிருப்புகளை பாதுகாப்போம். எனவே கணக்கெடுப்பு நடத்த ஒத்துழைக்க வேண்டும். நீதிமன்றம், பசுமை தீர்ப்பாயத்தில் மக்களுக்கு ஆதரவாக நிற்கும்” என்றார்.