கடலூர், ஆக.22- பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடலூர் குறுவட்ட அளவி லான விளையாட்டுப் போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. நடுவீரப்பட்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியை சாந்த குமாரி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ் குமார் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் கடலூர் குறுவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.இதில் தடகள சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் அசோகன், மாவட்ட தடகள பயிற்றுநர் மாய கிருஷ்ணன், இணை செயலாளர் விக்ரமன், அருள் செல்வம், நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.