ராணிப்பேட்டை, ஜூலை 5- ராணிப்பேட்டை மாவட்ட அளவில் மாணவர்களுக்கு சாதியற்ற சமத்துவம் விழிப்புணர்வு போட்டி ராணிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் வியாழனன்று (ஜூலை4) ராணிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, கட்டுரை போட்டி மற்றும் ஓவிய போட்டி நடைபெற்றது. இதில் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் புள்ளியியல் ஆய்வாளர் ரேகா மற்றும் உதவி ஆய்வாளர்கள் சிவகுமார், பாண்டுரங்கன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 176 பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். பல்வேறு போட்டிகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.