districts

img

‘இதய அதிர்ச்சி சிகிச்சை குழு முதல்முறையாக துவக்கம்

சென்னை, செப்.26-  இந்தியாவின் முதலாவது ஒருங்கிணைக்கப்பட்ட இதய அதிர்ச்சி சிகிச்சை குழு சென்னையில் தொடங்கப் பட்டுள்ளது. வடபழனி காவேரி மருத்துவமனையில் இந்த சிகிச்சை குழுவை மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். ஶ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இதய பராமரிப்பு மையத்தின் தலைவர்  எஸ். தணிகாசலம் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர்  டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தீவிரமான இதய செயலிழப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைகளிலுள்ள நோயாளிகளுக்கு விரை வான, ஒருங்கிணைக்கப்பட்ட சிகிச்சையை வழங்குவதற் கென இக்குழு உருவாக்கப்பட்டிருக்கிறது. சிகிச்சை வழங்குவதில் ஏற்படும் தாமதம் பல நேரங்களில் உயிரிழப் பிற்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், இது நிகழாமல் தடுப்பதே இந்த புதுமையான  முயற்சியின் நோக்கமாகும். ஒரு பிரத்யேக ஹெல்ப்லைன் வழியாக இதய அதிர்ச்சி சிகிச்சை குழுவின் சேவையை நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் அணுகிப்பெற முடியும். இதனால் ஆபத்தான தருணங் களில் தாமதமின்றி உயிர் காக்கும் இடையீட்டு சிகிச்சை கள் உடனடியாக வழங்கப்படுவதை இக்குழு உறுதி செய்யும் என்று குழுவில் இடம் பெற்றுள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர்.