districts

img

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மேலும் மேலும் அழிக்கலாமா?

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், பெருங்குடி குப்பை  கொட்டும் வளாகம் உள்ளது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள  இந்த கிடங்கில், பெருநகர சென்னை  மாநகராட்சியின் பல்வேறு பகுதி களில் சேகரிக்கப்படும் வீடு, தொழிற் சாலை, மருத்துவக் கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் சுமார் 250 ஏக்கரில் மலை போல் குப்பை குவிந்து கிடக்கிறது. மக்கள் போராட்டம் உள்ளிட்ட காரணங்களால் தற்போது 9 முதல் 15  வரையிலான மண்டலங்களில் சேரும்  குப்பைகளை மட்டும் கொண்டு வந்து  கொட்டப்படுவதாக கூறப்படுகிறது. அதாவது தினசரி 2500 டன் குப்பையை  கொண்டு வந்து மாநகராட்சி கொட்டு கிறது. இந்தக் கழிவுகளில் இருந்து வடியும் கழிவுநீர் நிலத்தடி நீரை மாசுப் படுத்துகிறது. மழை நீருடன் கலந்து பலப்பகுதிகளுக்கு பரவுகிறது.  இதன்காரணமாக சுற்றுவட்டாரப் பகுதியில் பல கிலோ மீட்டர் தூரத் திற்கு நிலத்தடி நீர் மாசடைந்து, உபயோகமற்றதாக மாறியுள்ளது.  பெருங்குடி குப்பை கிடங்கை சுற்றி துரைப்பாக்கம், வேளச்சேரி, பள்ளிக் கரணை, மேடவாக்கம், தரமணி உள்ளிட்ட  பகுதிகளில் மருத்துவமனை கள், கல்வி நிறுவனங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிகவளாகங் கள், மென்பொருள் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் போன்றவை இயங்குகின்றன. இந்த குப்பைக் கிடங்கால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பாதிக்கப்படுகின்றனர். இங்குள்ளவர்கள் நிலத்தடி நீரை பயன்படுத்துவதால் பல்வேறு உடல் பாதைகளுக்கும், நோய்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர். சுகாதார சீர்கேட்டால் பெண்களுக்கு குறைபிரச வம், கருச்சிதைவு, குழந்தையின்மை, சிசு மரணம், முதியவர்களுக்கு மூச்ச டைப்பு, கண்ணெரிச்சல், இதயநோய் போன்றவை ஏற்படுகிறது.  இந்த குப்பைக் கொட்டும் வளாகத்தை பயோ மைனிங் முறை யில் குப்பைகளை அகற்றி, நிலத்தை மீட்டெடுக்கும் பணி 2022ஆம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்தப்பணி கடந்த 2024 பிப்ரவரியோடு நிறை வடைந்திருக்க வேண்டும். ஆனால்  50 விழுக்காடு பணிகள் கூட முடிந்த தாக தெரியவில்லை. நாள்தோறும் 2500 டன் குப்பைகள் அங்கு கொட்டப்பட்டுக் கொண்டே இருக்கி றது. இந்த நிலையில், மீட்டெடுக்கப் படும்  இடத்தில் 100 ஏக்கர் பரப்பில  சூழலியல் பூங்கா அமைக்க உள்ளதாக மாநகராட்சி அறிவித்தது. இதற்கான கருத்துக்கேட்பு கூட்டத் தையும் கடந்த பிப்ரவரியில்  நடத்தி யது. அதில் பங்கேற்ற சமூக ஆர்வலர் கள், குடியிருப்புவாசிகள், குடியிருப் போர் நலச்சங்கத்தினர், அறிவியல் இயக்கத்தினர், அரசியல் கட்சிகள் அனைவருமே இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பயோ மைனிங் முறையில் நிலத்தை மீட்டெடுக்கப்பட்ட பின்னர், 445 ஏக்கர்  நிலத்தை வனத்துறைக்கு மாநக ராட்சி ஒப்படைக்க வேண்டுமென்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. அதனை மாநகராட்சி ஏற்க மறுத்து வருகிறது. மீட்டெடுக்கப்படும் நிலத்தில் 500 மெட்ரிக் டன் திறனுடைய உயிரி  எரிவாயு நிலையம், 500 மெட்ரிக் டன்  திறனுடைய காற்று புகும் வகையில்  உரம் தயாரிக்கும் கூடம், 1200 மெட்ரிக்  டன் திறனுடைய பொருட்கள் வள மீட்பு மையம் அமைக்கப்பட உள்ளது. மாநகராட்சியின் நடவடிக்கை சுற்றுச் சூழலை பாதுகாப்பது, மேம்படுத்து வது போன்றவற்றிற்கு நேர்மாறாக உள்ளது. சென்னை மாநகருக்கு வெளியே, மக்கள் வசிக்காத பகுதியில் குப்பைகளை கொண்டு சென்று, இத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். பெருங்குடியில் குப்பை கொட்டுவதை நிறுத்திவிட்டு, பயோ மைனிங் முறையில் சதுப்பு நிலத்தில் புதைந்திருக்கும் கழிவுகளை அகற்ற  வேண்டும். மழைநீரை பெருமளவில் சேகரிக்கும்போது அடுத்தசில ஆண்டு களில் நிலத்தடி நீர் தூய்மை அடையும். சதுப்பு நிலத்தில் பல்லுயிர்களின் வாழ்வு மீட்டெடுக்கப்படும். ராம் சார் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலத்திலிருந்து கட்டிடங்களை அகற்றி, முழுமையாக மீட்டெடுக்கும் பணியை அரசு செய்ய வேண்டும்.