48வது சென்னை புத்தகக்காட்சியில், பாரதி புத்தகாலயத்தில் தென்சென்னை மாவட்ட பாலர் பூங்கா சார்பில் 100 குழந்தைகளுக்கு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிறன்று (ஜன.5) பாரதி புத்தகாலயம் அரங்கில் நடைபெற்றது. நிகழ்வில் திரைக்கலைஞர் ரோகிணி குழந்தைகளுக்கு புத்தகங்களை வழங்கினார். பாலர் பூங்கா நிர்வாகிகள் கே.வனஜகுமாரி, எஸ்.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.