districts

img

வாலிபர் சங்க ரத்ததான முகாம்

கடலூர், அக். 3- கள்ளச்சாராய ரவுடிகளால் கொல்லப் பட்ட கடலூர் தியாகிகள் குமார், ஆனந்தன் 25 ஆம் ஆண்டு நினைவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ‘வேண்டாம் போதை வேண்டும் வேலை’ என்ற முழக்கத்தை முன்வைத்து  காந்தி பிறந்த நாளில் வேப்பூர் அரசு மருத்துவமனையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்கத்தின் வட்ட தலைவர் கே.அசோக்குமார் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் எம். கனகராஜ் வரவேற்றார். ரத்ததான முகாமை காவல் துணை கண்காணிப்பாளர் ஆர்.மோகன் துவக்கி வைத்தார். ரத்ததான கழகத்தின் மாநில தலைவர்  சி. கருணாகரன், வேப்பூர் அரசு மருத்துவ மனையின்  தலைமை மருத்துவர் டி. அகிலன் கண்ணன், கிராம நிர்வாக அலுவ லர்கள் சி. ராஜ், பி.விஷ்ணு, வாலிபர் சங்கத்தின் மாநில இணைச்செயலாளர் எம்.கே.பழனி, துணைத்தலைவர் கே. சின்னத்தம்பி, மாவட்ட செயலாளர் எஸ். வினோத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். வட்ட பொருளாளர் ஜனார்த் தனன் நன்றி கூறினார்.