districts

img

புவனகிரி மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் சிபிஎம் மாநாட்டில் தீர்மானம்

சிதம்பரம், அக் 18  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புவனகிரி ஒன்றியம் 24 ஆவது மாநாடு தோழர் சங்கரய்யா நினைவரங்கத்தில் நடைபெற்றது.   கற்பகவள்ளி செங் கொடியை ஏற்றி வைத்தார். ஜாகிர் உசேன்  வரவேற்றார். சதானந்தம்  அஞ்சலி  தீர்மா னத்தை  வாசித்தார்.  கடலூர் மாவட்டச் செயலாளர் ஜி.மாதவன் துவக்கி  வைத்து  பேசினார். ஒன்றியச் செயலாளர் பி.ஜே. ஸ்டாலின் வேலை  அறிக்கையையும், புவனகிரி நகர செயலாளர் மணவாளன் வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித்தனர். மத்தியக் குழு  உறுப்பினர்  உ.வாசுகி, மாவட்ட  செயற்குழு   உறுப்பினர் ஜி.ஆர். ரவிச்சந்திரன்  ஆகியோர்  வாழ்த்துரை   வழங்கினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். ராமச்சந்திரன் நிறைவுரையாற்றினார். புதிய ஒன்றியக்குழு  13 பேர் கொண்ட புவனகிரி ஒன்றிய குழுவிற்கு செயலா ளராக  காளி. கோவிந்தராசு தேர்வு செய்யப்பட்டார்  தீர்மானங்கள் புவனகிரி தாலுகா  அரசு மருத்துவமனையை மேம்படுத்தி போதிய  மருத்துவர், ஊழியர்களை  நியமிக்க  வேண்டும்.   புவனகிரி  பேரூராட்சியில்  மின் மயானம்   அமைக்க  வேண்டும். வீராணம்  ஏரியை தூர் வார  வேண்டும்  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.