districts

img

13 ஆண்டுகளாக முடியாத போஜராஜன் நகர் சுரங்கப்பாதை பணி!

சென்னை, நவ. 5- சென்னை மாநகராட்சி மண்டலம் 5 ராயபுரம் சட்டமன்றத்திற்கு உட்பட்ட 53ஆவது வட்டம் பழைய வண்ணா ரப்பேட்டையில் சீனிவாசபுரம் குடிசை  பகுதி, மின்ட் மாடர்ன் தெரு, போஜ ராஜன் நகர், பெஜவாடா லைன், கீரைத் தோட்டம், அட்டி கிரவுண்ட் ஆகிய பகுதிகளில் சுமார் 6,000 குடியிருப்பு களில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். இந்தப் பகுதிக்கு ஒரு  வழி பாதை மட்டுமே உள்ளது. இப்பகுதியை ஒட்டி கொருக்குப் ்பேட்டை ரயில்வே தண்டவாளம் செல்கிறது. வெளியூர் செல்லும் ரயில் களும் அதே பாதையில் தான் செல்கி றது. இதில் தினசரி 50க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்வதால், அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ரயில்வே  கேட் மூடப்படுகிறது. நெரிசல் நேரங்களில், மாணவர் களும், தனியார் நிறுவன ஊழியர் களும் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. உயிருக்கு ஆபத்தான சூழலில் கூட ஆம்புலன்ஸ் உள்ளே சென்று வருவதில் சிரமம் உள்ளது. பிரசவ காலத்தில் பெண்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். தண்டவாளத்தை தாண்டி செல்லும் போது பல உயிரிழப்புகள் நடை பெற்றுள்ளன. தண்டவாளங்களை சுற்றியே இப்பகுதி உள்ளதால் செல்ல வேறு வழியின்றி அப்பகுதி மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல அமைப்புகளின் சார்பில் பலகட்ட போராட்டங்கள் நடை பெற்றது. அதன்பிறகு 2010ஆம் ஆண்டு போஜராஜன் நகரில் சுரங்கப் பாதை அமைப்படும் என அப்போதும் இருந்த திமுக ஆட்சியில் அறிவிக்கப் பட்டது. பணிகளும் துவங்கின. ஆமை வேகத்தில் நடந்து வந்த பணிகள் திடீ ரென கிடப்பில் போடப்பட்டது. அதன்பின் 2011இல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், ரூ.7 கோடி நிதி ஒதுக்கி சுரங்க ப்பாதை அமைக்கும் பணி துவங்கி யது. ஆறு மாதங்கள் பணி நடந்த நிலை யில் மீண்டும் பாதியிலேயே நிறுத்தப் பட்டது. மீண்டும் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மக்கள் மத்தி யில் பிரச்சாரம் செய்து போராட்டம் நடைபெற்றது. 2018இல் தொடங்கிய சுரங்கப்பாதை பணி, மிகவும் தாமத மாக நடந்த நிலையில், மீண்டும் இத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது

இந்த நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், பழைய வண்ணார ப்பேட்டை போஜராஜன் சுரங்கப் பாதையுடன் கண்ணப்பன் தெருவை இணைக்கும் வகையில் ரயில்வே  சுரங்கப்பாதைக்கு, 2022 அக்டோபரில் அடிக்கல் நாட்டப்பட்டது. ரயில்வே நிர்வாகம் மற்றும் மாநகராட்சி இணைந்து, இப்பணிகளை மேற் கொண்டு வருகின்றனர். போஜராஜன் நகர் சுரங்கப்பாதையின் மொத்த நீளம் 207 மீட்டர். அகலம் 6 மீட்டர். இதில் 37 மீட்டர் ரயில்வே நிர்வாகத்தால், 170 மீட்டர் சென்னை மாநகராட்சியால் அமைக்கப்படுகிறது. சென்னை மாந கராட்சி சார்பில் ரூ.12.36 கோடி செல வில் சுரங்கப்பாதை பணிகள் நடை பெற்று வருகின்றன. குடிநீர் வாரியம் சார்பில் 4 கோடி ரூபாய் செலவில் சுரங்கப் பாதையில் செல்லும் குடிநீர் குழாய்கள் மற்றும் கழிவுநீர் குழாய் கள் இணைப்பு முழுதும் துண்டிக்கப் பட்டு, அவை சுரங்கப் பாதைக்கு கீழே  கொண்டு செல்ல வழிவகை செய்ய ப்பட்டு வருகிறது. அதேபோல், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் 3 கி.மீ., தூரத்திற்கு செல்லும் எண்ணெய் குழாய்கள் இணைப்புகள் துண்டிக் கப்பட்டு, அவை சுரங்க பாதைக்கு கீழே கொண்டு செல்லும் பணிகள் நடப்ப தாக தெரிவிக்கின்றனர். ஆனால் பணி கள் நிறைவடையுமா? அல்லது பாதியி லேயே கிடப்பில் போட்டு விடுவார் களா? என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. பணி களில் ஏன் காலதாமதம் என்று பார்த் தால், ரயில்வே நிர்வாகத்திற்கு ஒதுக் கப்பட்ட பணிகள் நிறைவடைந்து விட்டது. மாநாராட்சிக்கு ஒதுக்கப் பட்ட பணிகளே மெத்தனமாக நடை பெறுகிறது. இதனால் முன்பை விட பொதுமக்கள் மிகவும் கடுமையான பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எனவே சுரங்கப்பாதை பணிகளை துரிதப் படுத்தி விரைவில் மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வர வேண்டும்.

மூலக்கொத்தளம் அடுக்குமாடி குடியிருப்புகள் தரமானதாக உள்ளதா?

சென்னை பழைய வண்ணை, ராய புரம் சட்டமன்ற தொகுதி 53ஆவது வட்டத்திற்குற்குட்பட்ட மூலக்கொத் தளம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தால் கடந்த 2018 ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு  கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டு 2020ஆம் ஆண்டு நிறைவடைந்தது.  பிளாக் ‘ஏ’ முதல் ‘எப்’ வரை 9 தளங்கள் குடியிருப்புகளும், ஜி. எச். ஐ  என 3 பிளாக்குகள் 11 தளங்கள் கொண்ட 1,044 குடியிருப்புகள் கட்டப் பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு  தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலி னால் காணொலி மூலம் திறக்கப் பட்டது. ஆனால் மக்கள் பயன்பாட் டிற்கு வழங்கப்படவில்லை. ரூ.5 லட்சம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி னார்கள். பொதுமக்களின் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு 4.30 லட்சம் கட்டினால் போதும் என்று கூறினர். அப்பகுதி மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என போராட்டங் கள் நடைபெற்றன. அதனையொட்டி ரூ.1.50 லட்சம் கட்டினால்போதும் என தெரிவித்தனர். 2024ஆம் ஆண்டு வீடுகள் ஒதுங்கீடு செய்யும் பணிகள் துவங்கின. இது வரை வில்லிவாக்கம் 150, மதுர வாயல் 20, சிந்தாதிரிப்பேட்டை 133, கண்ணப்பர் திடல் 114, ராம்தாஸ் நகர்,  பிரிவில் தோட்டம் 256 என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பால் டிப்போ மக்களுக்கு  இன்னும் ஒதுக்கீடு செய்ய வில்லை. ராம்தாஸ் நகர், பிரிவில்  தோட்டம் மக்களுக்கு 44 வீடுகள் ஒதுக்கீடு செய்யாமல் நிலுவையில் உள்ளது. 1,044 குடியிருப்புகள் கட்டப்பட்டு 4 ஆண்டுகள் தான் ஆகின்றது. மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு ஒரு மாதம்தான் ஆகிறது. ஆனால் குடியிரு ப்புகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. ஒரு பிளாக்கிற்கு 2 மின் தூக்கிகள் (லிப்ட்) உள்ளது. ஆனால் ஜி, எச், ஐ பிளாக்கில் 1 மட்டுமே பயன் பாட்டில் உள்ளது. அதுவும் மக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளது. பிற பிளாக்குகளில் மின் தூக்கிகள் பயன்பாட்டில் இல்லை. 3 மற்றும் 4ஆம் தளங்களில் இருந்து  நீர் வடிதல், தரை தளத்தில் நீர் ஊற் றெடுப்பு, 6ஆவது தளத்தில் கான்கிரீட் கலவை உதிர்தல் போன்றவை மக்களி டையே அச்சத்தை உருவாக்கி யுள்ளது. மின்சார பணிகள் முழுமை பெறாமல் இருப்பதால் இதுவரை 4 பேரை மின்சாரம் தாக்கி உள்ளது. ஜன்னல்கள் பழுதடைந்து, கழிப்பறை கள் சேதமடைந்துள்ளது. படிக்கட்டில் விரிசல்,  தண்ணீரில் புழுக்கள் மிதக்கி றது. மக்கள் பயன்பாட்டிற்கு தேவை யான அளவு தண்ணீர் வழங்கப்படு வதில்லை. இதுகுறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரி வித்தால், பேட்ச் ஒர்க் போடும் பணி கள் நடைபெறுகிறது என்று கூறுகின்ற னர்.

சிபிஎம் ராயபுரம் பகுதிக்குழு கோரிக்கை

எனவே குடியிருப்புகள் தரமாக கட்டப்பட்டுள்ளாதா என்பதை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், பின்னர் அதை சீர்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இலவச குடிமனைப்பட்டா 53ஆவது வட்டத்திற்குட்பட்ட பெரியபாளையத்தம்மன் கோவில், ஸ்டான்லி நகர், காத்பாடா, லேபர் லைன், கீரைத்தோட்டம், சீனிவாச புரம், சிதம்பரநாதனார் நகர், போஜ ராஜன் நகர் ஆகிய பகுதிகளில் 5  தலைமுறைகளை கடந்து மக்கள் வசிக்கின்றனர். அந்த பகுதி மக்க ளுக்கு இலவச குடிமனைப்பட்டா கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தி யும், இதுவரை பட்டா வழங்கப்பட வில்லை. கடந்த 2022ஆம் ஆண்டு அந்த  பகுதி மக்களை திரட்டி சிபிஎம் அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தையொட்டி, 6 மாத காலத்திற் குள் வழங்கப்படும் என்று உறுதி யளித்தனர். ஆனால் இதுவரை அதற்கான பணிகள் மேற்கொள்ள வில்லை. எனவே இந்த பகுதி மக்களுக்கு தமிழ்நாடு அரசு 30.8.2019 தேதியிட்ட அரசாணை 318/19 படி குடி மனை பட்டா வழங்க வேண்டும் என்று சிபிஎம் ராயபுரம் பகுதிக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.     - அம்பத்தூர் எஸ்.ராமு