பரதநாட்டிய நிகழ்ச்சி சென்னை, ஜூலை 3- ஆராதனா ராதா கிருஷ்ணன் மற்றும் மலர் ராதாகிருஷ்ணன் ஆகி யோரின பரத நாட்டிய நிகழ்ச்சி சென்னை அண்ணாசாலை யில் உள்ள ராணி சீதை அரங்கில் நடைபெற்றது. பரதநாட்டியம் மற்றும் மோகினியாட்டத்திற்கான அகாடமி இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஆச்சார்யா சாத்விகா அரவிந்தனின் சீடரான ஆராதனா ராதா கிருஷ்ணனின் பரதநாட்டிய மும் குரு வசந்தா அரவிந்தனி டம் நடனம் கற்ற மலர் ராதா கிருஷ்ணனின் மோகினி யாட்டமும் அனைவரையும் கவர்ந்தது. ஆறாவது வயதில் தனது நடனப் பயணத்தைத் தொடங்கிய ஆராதனா தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றி வருகிறார். கர்நாடக இசையோடு கலை, விளையாட்டு மற்றும் கைவினை என பன்முக ஆற்றல்கொண்டவர். இவரோடு நடனமாடிய 42 வயதாகும் மலர் ராதாகிருஷ்ணன், ஐடி நிபுணராகவும் கர்நாடக இசையில் ஆர்வம்கொண்டவராகவும் உள்ளார். இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் சித்ரா லட்சுமணன் இசை நிபுணர் சுபஸ்ரீ தணிகாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.