புதுச்சேரி, ஜூலை 8- இளைஞர்களை அத்துகூலிக ளாக வழி நடத்தும் புதுச்சேரி தனியார் நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும் வாலிபர் சங்கம் வலியுறுத்தல். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதுச்சேரி மாநிலம், விரிவடைந்த உழவர்கரை நகர கமிட்டி கூட்டம் லாஸ்பேட்டையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில செயலாளர் சஞ்சய் சேகர் தலைமை தாங்கி னார். வாலிபர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசி னார். மாநில தலைவர் கௌசிகன், பொருளாளர் ரஞ்சித் குமார் உட்பட பலர் பங்கேற்றனர். புதுச்சேரி இளைஞர்களை அத்தை கூலிகளாகவும், கொத்தடி மைகளாக நடத்தும் தனியார் தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்களை முறைப்படுத்தி குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.18000 உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி தொழிலாளர் நலத்துறை முன்பு ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகள் வாலிபர் சங்க உழவர்கரை கட்சியின் புதிய தலைவராக ஜெய பிரகாஷ், செயலாளர் நிலவழகன் உட்பட 8 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது.