சென்னை, நவ. 22 - சென்னையில் முன்னணி நிறுவனமான கிரி டிரேடிங் நிறுவனத்திற்கு, இந்திய வர்த்தகம் மற்றும் தொழிற் அமைப்புகளின் சம்மேளனமான பிக்கி தலைமைப் பொறுப்புகளில் பெண்களின் முக்கிய பங்களிப்பிற்கான மிக உயரிய விருதை வழங்கியுள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற பிக்கி மாநாட்டில் இந்த விருது வழங்கப்பட்டது. நிறுவனத்தின் தலைமை மற்றும் நிர்வாக பதவிகளில் மகளிரின் முக்கிய பங்களிப்பு, முன்னேற்றம், சம வாய்ப்புகள் போன்றவற்றில், கிரி நிறுவனத்தின் தொடர் முயற்சிகள் மற்றும் பங்களிப்பிற்காக வழங்கப்பட்டுள்ளது. கிரி நிறுவனத்தில் பணியாளர்களில் பெரும்பங்கு வகிப்பது பெண்களே ஆவர். கிரி, தனது செயல்பாட்டில், தலைமை மற்றும் உயர் நிர்வாகப் பதவிகளில் பெண்களுக்கென்று தனித்துவமான வாய்ப்புக்களை உருவாக்கி வருவதில் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டு வரு கின்றது என்று அதன் இயக்குநர் சாரதா பிரகாஷ் தெரிவித் துள்ளார்.