வடமாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது பாஜக வகையராக்கள் நடத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து செவ்வாயன்று (ஜூலை 9) தரமணியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.முகமதுரஃபி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொருளாளர் ஒய்.இஸ்மாயில், மாநில துணைச் செயலாளர் ஜமீலா ராசிக், மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, மாவட்டத் தலைவர் சுரேஷ் ஆண்டனி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ், செயலாளர் தீ.சந்துரு உள்ளிட்டோர் பேசினர்.