districts

உதவி ஆய்வாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி

கள்ளக்குறிச்சி, மே 11-

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் உதவி ஆய்வாளர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படு கிறது. தற்போது தமிழ்நாடு சீருடை பணி யாளர் தேர்வு வாரியத்தின் உதவி ஆய்வாளர் பதவிக்கு 615 காலி பணியிடங்கள் அறி விக்கப்பட்டுள்ளது.  

  இந்த தேர்வுக்கு இணையதளம் மூலமாக 1.6.23 முதல் 30.6.23 வரை விண்ணப் பிக்கலாம். இலவச பயிற்சி வகுப்புகள் 12.5.23  முதல் வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

  இலவச பயிற்சி வகுப்பில் பாட குறிப்பு களும், முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப் படும். பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள  விருப்பமுள்ளவர்கள் தங்களது புகைப் படம், ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் 18/63, நேபாள் தெருவில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் நேரில் தொடர்பு கொண்டு தங்களின் விவரத்தை தெரிவித்து பதிவு செய்து கொள்ள லாம் என ஆட்சியர் ஷ்ரவன்குமார் தெரி வித்தார்.