districts

சென்னை முக்கிய செய்திகள்

குண்டும் குழியுமாக சாலைகள் சீரமைக்க கோரிக்ைக

சென்னை, ஜூலை 8- பெரம்பூர் பகுதியில் குண்டும் குழியுமான சாலைகளை சீரமைக்க வேண்டும் என வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெரம்பூர்  பகுதி பேரவைக் கூட்டம் தலைவர் ஜி.நித்தியராஜ் தலைமையில் நடைபெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.அபிராமி துவக்கி வைத்தார். துணை செயலாளர் சுரேந்தர் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். செயலாளர் கார்த்திக் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் சுபாஷ் வரவு-செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.  மாவட்டச் செயலாளர் எல்.பி.சரவணத்தமிழன் பேரவையை நிறைவு செய்து பேசினார். முன்னதாக துணைத் தலைவர்  ஜபருல்லா கான் வரவேற்றார். சுரேந்திரன் நன்றி கூறினார். தீர்மானங்கள் கன மழை துவங்கும் முன்பு மழை நீர்வடி கால் சீரமைக்கும் பணி களை துரிதமாகவும், தரமாகவும் மேற்கொள்ள வேண்டும், பெருகி  வரும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தலைவராக நவீன் பாபு, செயலாளராக கார்த்தி, பொருளாள ராக சுபாஷ் உள்ளிட்ட 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

 கூடுதல்  ஓய்வூதியம் வழங்க  வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி, ஜூலை 8- 70 வயது கடந்த அரசு அனைத்து துறை ஓய்வூதியர்களுக்கும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், சத்துணவு,அங்கன்வாடி,பட்டு வளர்ச்சித் துறை ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 7850 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க கோரிக்கை பேரவை ரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட நிர்வாகிகள் பசுவராஜ் வீரபத்திரப்பா, செயலாளர் சந்திர சேகரன் நஞ்சுண்ட ரெட்டி கலந்து கொண்டனர். மாநில நிர்வாகி ஸ்ரீனி வாசலு வாழ்த்தி பேசினார். மாவட்டத் தலைவர் ஆர்.துரை கோரிக்கைகளை விளக்கினார். ராணிகலா நன்றி கூறினார். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் வாசன் ஐ கேர் மருத்துவமனையில் இலவச கண் பரிசோதனை  நடைபெற்றது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் போராட்டம்

சென்னை, ஜூலை 8- சென்னை உயர்நீதி மன்றம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் திங்களன்று நடந்தது. இதில் ஒன்றிய அரசின் 3 சட்டங்களையும் திரும்பபெற வேண்டும் என்று வலியுறுத்தி நீதிமன்ற  புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது.

5 பேருக்கு  எலி காய்ச்சல்

கள்ளக்குறிச்சி, ஜூலை 8- கள்ளக்குறிச்சி  மாவட்டம், தியாகதுருகம், வடதொரசலூர் காலனி பகுதியில் சிலருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது  இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த திவ்யா (வயது 25),பிரபாவதி (11), வெற்றிவேல் (12 ), குபேரன் (7),சுபானி (10)  ஆகியோர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.இதையடுத்து திவ்யா உள்பட 5 பேரும் அருகில் உள்ள மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். மேலும் இனியா (8)  எலிக்காய்ச்சலால்,  மது மிதா (5) மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதில் மதுமிதா, குபேரன் ஆகியோர் குண மடைந்து வீடு திரும்பினர். மற்றவர்களுக்கு மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி பாஜக அதிருப்தி எம்எல்ஏக்கள் தில்லி பயணம் ஒத்திவைப்பு

புதுச்சேரி, ஜூலை 9 புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் தோல்வியை தொடர்ந்து என்ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையே மோதல், விரிசல் ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் தோல்விக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி, பாஜக அமைச்சர்கள் செயல்பாடுகள் தான் காரணம் என பாஜக எம்எல்ஏ-க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், மற்றும் பாஜக ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ-க்கள் சிவசங்கர், அங்காளன், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக், நியமன எம்எல்ஏ-வான வெங்கடேசன் ஆகி யோர் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஆட்சியில் ஊழல், முறைகேடுகள் மலிந்துவிட்டதா கவும், புரோக்கர்கள் மூலம் ஆட்சி நடப்பதாகவும், முதல்வர் ரங்கசாமி, பாஜக எம்எல்ஏ-க்களிடம் பாகு பாடு காட்டுவதாகவும் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் குற்றம் சாட்டினர்.  இதையடுத்து பாஜக தலைமையானது, புதுவை பொறுப்பாளராக நிர்மல்குமார் சுரானாவை மீண்டும் நியமித்து, இப்பிரச்சினைக்கு தீர்வு காண அறிவுறுத்தியது. இதையடுத்து பாஜக பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா புதுவைக்கு வந்தார்.  மாநிலத் தலைவர் செல்வகணபதி எம்பி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சி வாயம், சாய் சரவணக் குமார், எம்எல்ஏ-க்கள் ராம லிங்கம், அசோக் பாபு ஆகியோர் கட்சி தலைமை அலு வலகத்துக்கு வந்தனர். அவர்களிடம் தனித் தனியாகவும், கூட்டாகவும் பேச்சுவார்த்தை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தார். எனினும் மதியம் 12 மணி வரை அதிருப்தி எம்எல்ஏ-க்கள் கட்சி அலுவலகத்துக்கு வரவில்லை.  இந்த நிலையில், கல்யாணசுந்தரம் எம்எல்ஏ தலைமை யில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ஜான்குமார், ரிச்சர்ட், அங்காளன், வெங்கடேசன், சிவசங்கர் ஆகியோர் கட்சி அலுவலகத்துக்கு வந்தனர். பிறகு, நிர்மல்குமார் சுரானாவை சந்தித்தனர். இச்சந்திப்பில் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிருப்தி எம்எல்ஏக்கள், “தேசியத் தலைவர் நட்டாவுடன் கூறிய அனைத்து தகவல்களையும் மேலிட பொறுப்பாளரிடம் கூறியுள்ளோம். அமித் ஷாவை சந்திக்க தில்லி செல்வதாக இருந்த பயணம் ஒத்திவைத்துள்ளோம்” என்றனர்